சிங்கம் 2: முதல் நாள் முதல் ஷோ பார்த்த டோணி?

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த் மல்டிபிளக்ஸ் ஒன்றில் சிங்கம் 2 படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க சென்றிருந்தார்.
அவருடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா நாயகி விசாகா சிங்கும் சென்றிருந்தார்.
இது குறித்து பிரியா ஆனந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சிங்கம் 2 பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் குரல் போய்விட்டது. விசாகா சிங் மற்றும் டோணி உடன் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அவர் டோணி என்று போட்டிருப்பதைப் பார்த்து பலரும் அவரிடம் ட்விட்டரில் டோணியா இல்லை அவரது மனைவியா என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிரியா இன்னும் பதில் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











