Don't Miss!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
மும்பையிலிருந்து வந்த "அன்பு" அதட்டல்.. ஆடிப் போன "செழியன்"!
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர் ஜி.வி. குமார் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் இவர் பைனான்சியர் அன்பு செழியனிடம் கடன் வாங்கியிருந்தார்.
இவர் தயாரித்த படங்கள் தொடர் தோல்வி படங்களாக பாக்ஸ் ஆபீசில் முடங்கியது. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டியும் கொடுக்க முடியவில்லை. அசல் எப்படி இவரால் நமக்கு கொடுக்க முடியும் என்று எண்ணிய அன்பு செழியன் தன் கறார் முகத்தை காட்டத் தொடங்கினார்.
இதற்கிடையே மாயமான் என்கிற சைன்ஸ் பிக்சன் படமொன்றை ஞானவேல்ராஜா, அபி அபி ஆகியோருடன் இணைந்து தயாரிக்க தொடங்கினார். ஷாக்கி ஷெராப், சந்தீப் கிருஷ்ணா, லாவண்யா, டேனியல் பாலாஜி, ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை G.V.குமார் இயக்கினார். 1.9.2017 அன்று ரீலீஸ் ஆன மாயமான் திரைக்கு வருவதற்கு முன் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே G.V.குமார் அன்பு செழியன் வசம் கடன் வாங்கியிருந்தார். மூன்று பேர் இணைந்து தயாரித்த மாயமான் படத்துக்கு அன்பு செழியன் கடன் கொடுக்கவில்லை. அதனால் படம் எந்த பிரச்சினையும் இன்றி வெளியாகும் என்ற குமாரின் நம்பிக்கையை அன்பு நமுத்துப்போக செய்தார்.
படத்தை விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்து விட்டாலும் விநியோகஸ்தர்கள் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை.. அன்பு செழியன் தன் விசுவாசிகள் அங்கம் வகிக்கும் திரைப்பட கூட்டமைப்பு மூலம் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடி கொடுத்தார்
சினிமா வியாபார நடைமுறைப்படி G.V.குமார் தரப்பில் நியாயம் இருப்பினும் கூட்டமைப்பு அன்பு செழியன் சொல்வதை செய்தது. பொறுத்து பார்த்த G. V.குமார் அரசியல் வாதிகள் உதவியை நாடினார். தனக்கிருந்த அரசியல் தொடர்புகள் மூலம் நேரடியாக பாஜகவிடம் போய் கதறியதாக கூறப்படுகிறது.
மும்பையில் இருந்து ஒரு தொலைபேசி அன்பு செழியனுக்கு வந்ததாம். கொடுத்த கடனை கேட்பது உங்கள் உரிமை அதனை தவறு என நாங்கள் கூறமாட்டோம். அதற்கு நீங்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் நியாயமானதில்லை. இது தொடருமானால் நீங்கள் தொழில் செய்வது இயலாமல் போய்விடும் என்று கூறி துண்டிக்கப்பட்டது தொலைபேசி அழைப்பு. அதிர்ந்து போன அன்பு செழியன் "மாயமான் " படத்துக்கு எந்த இடையூறும் தர வேண்டாம் என தகவல் அனுப்பினார்.
அந்த "அன்பான" அதட்டலுக்குப் பின் தமிழ் சினிமாவில் படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதை நிறுத்திய அன்பு செழியன் கொடுத்த கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையில் வேகம் கூட்டினார். அதன் தாக்கம் அசோக்குமார் தற்கொலையில் முடிந்துள்ளது. அசோக்குமார் தற்கொலை சம்பவம் பற்றி கமலஹாசன் எந்த கருத்தும் செல்லாதது ஏன் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை தொடர்ந்து கேட்டு வருவது ஏன் என்பது இப்போது புரியும். மாநில அமைச்சர்களின் அரவணைப்பில் அன்பு செழியன் இருந்தாலும் மத்திய அரசின் கொடுவாள் அவருக்கு மேல் தொங்கி கொண்டிருக்கிறது.