Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டில் தங்க வைத்தாரா மம்முட்டி?
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை வைத்து ஏகப்பட்ட தவறான தகவல்களும் பரவிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று நடிகர் மம்முட்டி சென்னையில் உள்ள தனது வீடுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க அனுமதித்தார் என்பது.
மம்முட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், மழை வெள்ளத்தால் தங்க இடமின்றித் தவிக்கும் மக்கள் குறிப்பிட்ட எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கவும் என்று, ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்திருந்தார்.
ஆனால் அதை நமது மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதோடு, தங்கள் இஷ்டத்துக்கு விளக்கமும் எழுதியிருந்தனர்.
"சென்னையில் எனக்கு மூன்று வீடுகள் உள்ளன. அவற்றில் தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள்" என்று மம்முட்டி சொன்னதாக செய்தி பரப்ப, அவர் வீடுகள் எங்கே உள்ளன என்று பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
உண்மையில் மம்முட்டி கூறியது, தங்க இடம் வேண்டுவோர் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என ஒரு நண்பரின் எண்ணைக் கொடுத்திருந்தார்.
வீடுகளைத் திறந்துவிடுவதாக அவர் சொல்லவில்லையாம். இப்போது லண்டனில் ஒரு படப்பிடிப்பிலிருக்கிறார் மம்முட்டி.