Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டில் தங்க வைத்தாரா மம்முட்டி?
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை வைத்து ஏகப்பட்ட தவறான தகவல்களும் பரவிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று நடிகர் மம்முட்டி சென்னையில் உள்ள தனது வீடுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க அனுமதித்தார் என்பது.
மம்முட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், மழை வெள்ளத்தால் தங்க இடமின்றித் தவிக்கும் மக்கள் குறிப்பிட்ட எண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவிக்கவும் என்று, ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்திருந்தார்.
ஆனால் அதை நமது மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதோடு, தங்கள் இஷ்டத்துக்கு விளக்கமும் எழுதியிருந்தனர்.
"சென்னையில் எனக்கு மூன்று வீடுகள் உள்ளன. அவற்றில் தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள்" என்று மம்முட்டி சொன்னதாக செய்தி பரப்ப, அவர் வீடுகள் எங்கே உள்ளன என்று பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
உண்மையில் மம்முட்டி கூறியது, தங்க இடம் வேண்டுவோர் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என ஒரு நண்பரின் எண்ணைக் கொடுத்திருந்தார்.
வீடுகளைத் திறந்துவிடுவதாக அவர் சொல்லவில்லையாம். இப்போது லண்டனில் ஒரு படப்பிடிப்பிலிருக்கிறார் மம்முட்டி.