Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
டைரக்டருடன் கோயிலில் மாலையும் கழுத்துமாக நின்ற மீரா மிதுன்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை : சர்ச்சை நாயகி மீரா மிதுன், இயக்குநர் ஒருவருடன் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் மாலை மாற்றி கொண்டதாக வெளியான போட்டோவால் கோலிவுட்டே பரபரத்து போய் உள்ளது.
அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகையும், மாடலுமான மீரா மிதுன் எது செய்தாலும், அதனை கழுவி ஊற்றுவதற்கு என்று சமூக வலைத்தளத்தில் ஒரு கூட்டம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தான் மீரா மிதுனும் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சி முலம் பிரபலமான மீரா மிதுன், படங்களில் சிலவற்றில் நடித்து வருகிறார்.
இந்த சமயத்தில் தனக்கு வரும் பட வாய்ப்புகளை சூர்யா, விஜய் போன்ற வாரிசு நடிகர்கள் கெடுப்பதாக, வீடியோ வெளியிட்டு கதறியது மட்டும் இன்றி, பெரிய நடிகர் பலர் பற்றியும் பேசி வம்பில் மாட்டிக் கொண்டார். ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டு பின்னர் மன்னிப்பு கேட்டார். பின்னர் பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் கொஞ்சம் அடங்கி போயுள்ள மீரா. அவ்வப்போது, ஆல்பம் சாங் எடுக்கிறேன் என்கிற பெயரில் கவர்ச்சி அட்ராசிட்டி செய்து வருகிறார்.மேலும் இவர், இயக்குநர் அன்பரசன் என்பவர் இயக்கி வரும் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமான 'பேய காணோம்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஒரு பேய், மற்றொரு பேய காணவில்லை என்று புகார் கொடுக்கும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. கவுசிக் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மீரா மிதுன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தருண் கோபி, கோதண்டம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கார்த்தி படத்துல நடிக்க கிடைத்த வில்லன் சான்ஸ்.. நோ சொன்ன விஜய் சேதுபதி.. என்ன பிரச்சினை?
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கூட, மீரா மிதுனுக்கும், காமெடி நடிகர் கோதண்டத்திற்கும்,இடையே பிரச்சனை வந்தது. அதே போல் படப்பிடிப்பு முடியும் முன்னரே இவர் இரவோடு இரவாக சென்று விட்டார் என படக்குழுவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.பிறகு மீரா மிதுனுக்கு பதிலாக டூப் போட்டு மீதமுள்ள படத்தை முடித்ததாக கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது மீரா மிதுன் 'பேய காணும்' படத்தின் இயக்குநர் அன்பரசனுடன் நேற்று மாலை மாற்றிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளன.இது ஒரு புறம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம், படத்தின் ப்ரொமோஷனுக்காக தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறி வருகின்றனர்.