Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புராண படத்தில் நடிக்க 12 கோடி சம்பளம் கேட்ட நடிகை...பதறிப்போன படக்குழு
மும்பை : ராமாயணம் உள்ளிட்ட பல புராணங்களை அடிப்படையாக வைத்து பல மொழிகளில் பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு புராண கதைகளையும், நாவல்களையும் மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அப்படி ராமாயணத்தை சீதையின் பார்வையில் சொல்லும் முயற்சியாக புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அலவுகிக் தேசாய் இயக்க உள்ளார். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படமாக இப்படத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சீதை கேரக்டரில் நடிக்க முதலில் கரீனா கபூர் கானை தான் கேட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஹீரோயினுக்கு ரூ.6 முதல் 8 கோடி வரை சம்பளம் முடிவு செய்து வைத்துள்ளனர். ஆனால் இதில் நடிக்க கரீனா ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
'ஹே என் கோலி சோடாவே’.. ரவுடி பேபி மூடில் தனுஷ்.. எக்கச்சக்கமாக எகிறும் லைக்ஸ்.. காரணம் இது தான்!
இது புராண கதை என்பதால் இவ்வளவு அதிக தொகையை கேட்டுள்ளாராம். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு 8 முதல் 10 மாதங்கள் வரை நடக்கும் என்பதால் அதிக தொகையை சம்பளமாக அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வளவு அதிக தொகையை சம்பளமாக கொடுக்க படக்குழு ஒப்புக் கொண்டதா, இந்த படத்தில் கரீனா கபூர் நடிப்பது உறுதியாகி விட்டதா என்பது போன்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கரீனா கபூர் அடுத்ததாக வீரி தி வெட்டிங் 2, ஹன்சல் மேத்தா இயக்க போகும் படம் ஆகியவற்றிலும் நடிக்க போகிறாராம். இந்த படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள். ஓரிரு மாதங்களில் முடிந்து விடும். ஆனால் ராமாயணம் பெரிய பட்ஜெட் படம் என்பதால் பெரிய தொகையை சம்பளமாக அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.