Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இதுதான் மரியாதை.. பார்த்திபன் காலில் விஜய் அப்பா விழுந்தாரா? பேச்சால் ஏற்பட்ட சர்ச்சை!
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் காலில் நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் விழுந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் காலில் நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் விழுந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர். பார்த்திபனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி உள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது நல்ல விமர்சனம் மற்றும் வசூலை பெற்று படம் ஹிட் அடித்துள்ளது.
இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யின் அப்பா இயக்குனர் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
ஏன் கவின் இப்படி செஞ்சாரு.. கமல் சொல்றத பார்த்தா கூப்ட்டு விசாரிப்பாரு போல!
என்ன பேசினார்
இந்த விழாவில் பேசிய இயக்குனர் சந்திரசேகர், நான் பொதுவாக சிலரை மட்டும் பார்த்துதான் வியந்து இருக்கிறேன். அதிலும் மூன்று பேரின் படங்களை பார்த்துவிட்டு பெரிதும் வியந்துள்ளேன். நான் பார்த்து முதலில் வியந்த படம் சங்கராபரணம்.
காலில் விழுந்தேன்
இந்த படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குனர் கே விஸ்வநாத் காலில் விழுந்தேன் . அதன்பின் அரங்கேற்றம் பார்த்துவிட்டு இயக்குநர் கே பாலச்சந்தர் காலில் விழுந்தேன். கடைசியாக புதிய வார்ப்புகள் பார்த்துவிட்டு இயக்குனர் பாக்யராஜ் காலில் விழுந்தேன்.
மரியாதை
நான் அதே மரியாதையை ஒத்த செருப்பு படம் பார்த்துவிட்டு பார்த்திபனுக்கு செய்துள்ளேன். அவர் மிக அருமையாக படம் எடுத்துள்ளார். ஒரே நபரை வைத்து இவ்வளவு பெரிய திரில்லரை கொண்டு செல்ல முடியும் என்பதை அவர் சிறப்பாக நிரூபித்துவிட்டார் என்று கூறி உள்ளார்.
பலரும் கேள்வி
ஆனால் இதில் சந்திரசேகர் பார்த்திபன் காலில் விழுந்தாரா என்று கூறவில்லை. அதே சமயம் ''நான் அவருக்கு அந்த மரியாதையை செய்துவிட்டேன்'' என்று சந்திரசேகர் கூறியுள்ளார். இதனால் பார்த்திபன் காலில் சந்திரசேகர் விழுந்து மரியாதை செய்து இருப்பாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.