Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
‘ஜியா’வை வாழ்நாள் முழுதும் காதலித்துக் கொண்டே இருப்பேன் : சூரஜ் உருக்கம்
மும்பை: சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹிந்தி நடிகை ஜியாகானின் காதலரான சூரஜ், தான் வாழ்நாள் முழுவதும் ஜியாவை காதலித்துக் கொண்டே இருக்கப் போவதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்ற மாதம் , மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இளம் ஹிந்தி நடிகையான ஜியாகான். அவரது தற்கொலைக்குப் முன் அவர் கைப்பட எழுதிய கடைசிக் கடிதம் என 6 பக்க கடிதம் ஒன்று போலீஸ் வசம் ஒப்படைக்கப் பட்டது.
அதில், நடிகர் சூரஜுடனான தனது காதல் முறிவைக் குறிப்பிட்டிருந்தார் ஜியா. அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட சூரஜ் பன்சாலி சமீபத்தில் ஜாமீனில் வெளி வந்தார். தற்போது ஜியாவுக்கும், தனக்குமான காதல் பற்றி ஆங்கில இதழ் ஒன்றில் மனம் திறந்திருக்கிறார் சூரஜ்.
பேஸ்புக் நட்பு...
கடந்த 10 மாதத்துக்கு முன்பு பேஸ்புக் மூலம் ஜியாகானுடன் நட்பு ஏற்பட்டது. அவர் மிகவும் நல்லவர். சிறிய விஷயங்கள் அவருக்கு சந்தோஷம் தந்தது. அவரது நட்பை முதலில் எனது தந்தை ஏற்கவில்லை. பின்னர் ஏற்றுக்கொண்டார். அவரது குடும்பத்தாரிடம் ஜியாகானுக்கு இணக்கமான உறவு இல்லை.
சந்தேகம்...
நான் நடிப்பு பயிற்சிக்கு சென்றபோது மற்ற பெண்களுடன் பழகுவதாக என் மீது ஜியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு என்னுடனே ஜியா பயிற்சி பள்ளிக்கு வந்தார்.
கர்ப்பம் பற்றி தெரியாது...
ஜியாகானுடன் உறவு கொண்டீர்களா என்று போலீசார் என்னை கேட்டபோது, ஆமாம் என்று பதில் அளித்தேன். ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக என்னிடம் கூறவில்லை.
ஒரு மாதத்திற்கு முன்பே...
ஜியா இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டோம். சினிமாவுலகில் வாய்ப்பு இல்லாததால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக எனக்கு தகவல் வந்தது.
ஜியா, ஐ லவ் யூ...
இதுதொடர்பாக போலீசார் என்னை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். ஜியாவுடனான எனது உறவை மறைக்க விரும்பவில்லை. என் வாழ்நாள் முழுவதும் அவருடன் என்னை இணைத்து பேசினாலும் மறுக்க மாட்டேன். ஏனென்றால் இன்னும் அவரை காதலிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.