Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டிஜிட்டலுக்கு மாறும் மணிரத்னத்தின் கிளாசிக் ஹிட்...என்ன படம் தெரியுமா ?
சென்னை : தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர்களில் ஒருவர் மணிரத்னம். இந்திய சினிமாவில் மறக்க முடியாத பல எவர்கிரீன் மெகா ஹிட் படங்களை கொடுத்ததும் மணிரத்னம் தான்.
தியேட்டர்கள்ல ரிலீசாகும் த்ரிஷ்யம் 2... ஆனா இங்க இல்லீங்க... மோகன்லால் அப்டேட்
இவர் இயக்கிய இருவர் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பணி படு மும்முரமாக நடந்து வருகிறது. அரசியல் த்ரில்லர் படமான இது, தமிழக அரசியலில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக இருந்த முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி மற்றும் எம்ஜிஆரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
நிஜ அரசியல் பேசிய படம்
இவர்களின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை த்ரில்லர் கலந்த கதையாக இருவர் படத்தில் சொல்லி இருப்பார் மணிரத்னம். மோகன்லால், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 1997 ம் ஆண்டு இந்த படம் ரிலீசானது.
8 கே டிஜிட்டலில் இருவர்
ரிலீசாகி கிட்டதட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் டிஜிட்டலுக்கு மாற்றப்படுகிறது. அதுவும் 8 கே டிஜிட்டலுக்கு. டிஜிட்டல் ஆக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, டிஜிட்டல் செய்யப்பட்ட சில காட்சிகள், ஸ்கேன் செய்யப்பட்ட சில ஃபோட்டோக்கள் வெளியாகி உள்ளது.
தியேட்டரில் ரீ ரிலீஸ்
இந்த படம் முழுவதுமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, வெளியிடப்படும் போது அது ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என உறுதியாக கூறப்படுகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு டிஜிட்டல் செய்யப்பட்ட இருவர் படம் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான பொன்னியின் செல்வன்
மணிரத்னம் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். முதல் பாகத்தை ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலும், இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு இறுதியிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பான் இந்தியன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த மெகா ஸ்டார்கள் நடிக்கிறார்கள்.