Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நிச்சயம் பலர் கதறி அழுவார்கள்.. சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ டிரைலர் நாளை ரிலீசாகிறது!
சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'Dil Bechara' பட டிரைலர் நாளை வெளியாகிறது. இந்த அறிவிப்பை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் திடீர் மரணம், இந்திய திரையுலகையே ஆட்டி படைத்து வருகிறது.
விசாரணைகளும், விவாதங்களும் மறைந்த நடிகர் பெயரில் தினமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு: வைரலாகும் சுஷாந்த் சிங் அப்பாவின் டிவிட்டர் கணக்கு ஃபேக்காம்
கடைசி படம்
இன்னும் எத்தனையோ பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கக் கூடிய இளம் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத், அதற்குள் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படமான ‘தில் பெச்சாரா' படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார்.
டிரைலர் ரிலீஸ்
இன்னும் ஒரு வாரத்தில் தில் பெச்சாரா படம் வெளியாக உள்ள நிலையில், நாளை அந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது என்ற அறிவிப்பை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். எல்லோரும், வானத்தை பார்த்து காத்துக் கொண்டிருங்கள் எனறும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
என்றும் ரசிகர்கள் நெஞ்சில் இருப்பார்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு பிரான்ஸ் நாட்டின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அஞ்சலி செலுத்தியதாகவும், அவர் இந்தியா முழுவதும் உள்ள பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் எப்போதுமே குடியிருப்பார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். நாளை வெளியாகும் டிரைலரை பார்க்க ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
நிச்சயம் நாளை பலர் அழுவார்கள்
ஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்டுக்கு கீழே, சுஷாந்த் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், நிச்சயம் நாளை பலர் டிரைலரை பார்த்துவிட்டு கதற கதற அழுவார்கள், ஏன் எங்களை விட்டுட்டு போய்ட்டீங்க.. இவ்ளோ சீக்கிரமா என பதிவிட்டு, பலரது மனதையும் உருக்கி உள்ளார்.
பாடல்களுக்காக காத்திருக்கிறோம்
சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான கோப்ரா படத்தின் ‘தும்பி துள்ளல்' பாடல் ரசிகர்களை வசீகரித்து வரும் நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ‘தில் பெச்சாரா' படத்தில் ரஹ்மான் போட்டிருக்கும் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதாகவும், ஆனால், சுஷாந்த் சிங்கின் சிரிப்பையும், அழகையும் அவர் இல்லாத இந்த நிலையில், கண்கள் எப்படி காணுமோ என்ற அச்சமும் எழுகிறது என பதிவிட்டு வருகின்றனர்.