Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நிச்சயம் பலர் கதறி அழுவார்கள்.. சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ டிரைலர் நாளை ரிலீசாகிறது!
சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'Dil Bechara' பட டிரைலர் நாளை வெளியாகிறது. இந்த அறிவிப்பை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் திடீர் மரணம், இந்திய திரையுலகையே ஆட்டி படைத்து வருகிறது.
விசாரணைகளும், விவாதங்களும் மறைந்த நடிகர் பெயரில் தினமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு: வைரலாகும் சுஷாந்த் சிங் அப்பாவின் டிவிட்டர் கணக்கு ஃபேக்காம்
கடைசி படம்
இன்னும் எத்தனையோ பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கக் கூடிய இளம் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத், அதற்குள் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படமான ‘தில் பெச்சாரா' படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார்.
டிரைலர் ரிலீஸ்
இன்னும் ஒரு வாரத்தில் தில் பெச்சாரா படம் வெளியாக உள்ள நிலையில், நாளை அந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது என்ற அறிவிப்பை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். எல்லோரும், வானத்தை பார்த்து காத்துக் கொண்டிருங்கள் எனறும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
என்றும் ரசிகர்கள் நெஞ்சில் இருப்பார்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு பிரான்ஸ் நாட்டின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அஞ்சலி செலுத்தியதாகவும், அவர் இந்தியா முழுவதும் உள்ள பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் எப்போதுமே குடியிருப்பார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். நாளை வெளியாகும் டிரைலரை பார்க்க ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
நிச்சயம் நாளை பலர் அழுவார்கள்
ஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்டுக்கு கீழே, சுஷாந்த் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், நிச்சயம் நாளை பலர் டிரைலரை பார்த்துவிட்டு கதற கதற அழுவார்கள், ஏன் எங்களை விட்டுட்டு போய்ட்டீங்க.. இவ்ளோ சீக்கிரமா என பதிவிட்டு, பலரது மனதையும் உருக்கி உள்ளார்.
பாடல்களுக்காக காத்திருக்கிறோம்
சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான கோப்ரா படத்தின் ‘தும்பி துள்ளல்' பாடல் ரசிகர்களை வசீகரித்து வரும் நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ‘தில் பெச்சாரா' படத்தில் ரஹ்மான் போட்டிருக்கும் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதாகவும், ஆனால், சுஷாந்த் சிங்கின் சிரிப்பையும், அழகையும் அவர் இல்லாத இந்த நிலையில், கண்கள் எப்படி காணுமோ என்ற அச்சமும் எழுகிறது என பதிவிட்டு வருகின்றனர்.