Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேரள நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்... 'அம்மா' சங்கக் கூட்டத்தில் அதிரடி முடிவு!
திட்டம் போட்டு பாவனாவைக் கடத்தி மானபங்கம் செய்த வழக்கில் கைதாகியுள்ள திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது கேரள திரையுலகை உலுக்கியுள்ளது. திலீப் கைது செய்யப்பட்ட உடனே மலையாள நடிகர் சங்கமான அம்மா அவசர கூட்டம் நடத்தியது. கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டியின் வீட்டில் இந்த அவசரக் கூட்டம் நடந்தது. இந்த சங்கத்தின் பொருளாளராக உள்ளார் நடிகர் திலீப்.
திலீப்புக்கு ஆதரவாகவும் பாவனாவுக்கு எதிராகவும் சில மலையாள நடிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு அம்மா கடும் கண்டனம் தெரிவித்தது.
முறையான விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளியைக் கைது செய்த கேரள அரசுக்கும் போலீசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அம்மா அமைப்பிலிருந்து நடிகர் திலீப் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் நடிகர் மோகன் லால், மம்முட்டி, ரம்யா நம்பீசன், தேவன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கூட்டத்துக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அம்மா பொதுச் செயலாளரான மம்முட்டி மேற்கொண்டு எதையும் பேச மறுத்துவிட்டார்.