Don't Miss!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேரள நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்... 'அம்மா' சங்கக் கூட்டத்தில் அதிரடி முடிவு!
திட்டம் போட்டு பாவனாவைக் கடத்தி மானபங்கம் செய்த வழக்கில் கைதாகியுள்ள திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது கேரள திரையுலகை உலுக்கியுள்ளது. திலீப் கைது செய்யப்பட்ட உடனே மலையாள நடிகர் சங்கமான அம்மா அவசர கூட்டம் நடத்தியது. கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டியின் வீட்டில் இந்த அவசரக் கூட்டம் நடந்தது. இந்த சங்கத்தின் பொருளாளராக உள்ளார் நடிகர் திலீப்.
திலீப்புக்கு ஆதரவாகவும் பாவனாவுக்கு எதிராகவும் சில மலையாள நடிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு அம்மா கடும் கண்டனம் தெரிவித்தது.
முறையான விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளியைக் கைது செய்த கேரள அரசுக்கும் போலீசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அம்மா அமைப்பிலிருந்து நடிகர் திலீப் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் நடிகர் மோகன் லால், மம்முட்டி, ரம்யா நம்பீசன், தேவன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கூட்டத்துக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அம்மா பொதுச் செயலாளரான மம்முட்டி மேற்கொண்டு எதையும் பேச மறுத்துவிட்டார்.