நடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்க பல்சர் சுனிக்கு ரூ.1.5 கோடி கொடுத்த திலீப்
Recommended Video

கொச்சி: பிரபல நடிகையை மானபங்கப்படுத்த மலையாள நடிகர் திலீப் பல்சர் சுனிக்கு ரூ. 1.5 கோடி கொடுத்ததாக சிறப்பு விசாரணை குழு அளித்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி பல திடுக்கிடும் தகவல்களை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

திலீப்
நடிகையின் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு அளித்துள்ள துணை குற்றப்பத்திரிகை பிரபல ஆங்கில நாளிதழுக்கு கிடைத்துள்ளது. நடிகையை அசிங்கப்படுத்த திலீப் பல்சர் சுனிக்கு ரூ. 1.5 கோடி கொடுத்ததாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவ்யா மாதவன்
நடிகையை கடத்தி அசிங்கப்படுத்திய வழக்கில் மேடம் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சுனி தெரிவித்தார். பின்னர் அந்த மேடம் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரோதம்
திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் இருந்த உறவை கண்டுபிடித்து அவரின் மனைவியான மஞ்சு வாரியரிடம் அந்த பிரபல நடிகை தெரிவித்தார். இதனால் திலீப் அந்த நடிகையை பழிவாங்க நினைத்தார்.

பலாத்காரம்
பலருடன் சேர்ந்து நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து தன்னிடம் கொடுக்குமாறு திலீப் சுனிலுக்கு உத்தரவிட்டுள்ளார். நடிகைக்கு ஒரு பாடம் கற்பிக்கவே திலீப் இந்த செயலில் இறங்கினாராம்.

முயற்சி
நடிகை ஷூட்டிங்கிற்காக கோவா சென்ற இடத்தில் அவரை தாக்க சுனி முயற்சி செய்து நடக்கவில்லை. அதன் பிறகே கொச்சியில் வைத்து நடிகையை அசிங்கப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











