'அந்த 4' நடிகைகளை மட்டும் திருமணத்திற்கு அழைக்காத நடிகர் திலீப், காவ்யா
திருவனந்தபுரம்: நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் தங்களின் திருமணத்திற்கு நடிகைகள் பாவனா, சம்யுக்தா வர்மா, ஸ்வேதா மேனன், பூர்ணிமா உள்ளிட்டோரை அழைக்கவில்லை.
நடிகை மஞ்சு வாரியரை பிரிந்த பிறகு நடிகர் திலீப் நடிகை காவ்யா மாதவனை கடந்த வெள்ளிக்கிழமை கொச்சியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்கு ஒரு சில நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பாவனா
திலீப் தனது இரண்டாவது திருமணத்திற்கு நடிகைகள் பாவனா, சம்யுக்தா வர்மா, பூர்ணிமா, ஸ்வேதா மேனன் ஆகியோரை அழைக்கவில்லை. இந்த நடிகைகள் அனைவரும் மஞ்சுவின் தோழிகள் ஆவர்.

சம்யுக்தா வர்மா
நடிகைகள் பாவனா, சம்யுக்தா வர்மா, பூர்ணிமா, ஸ்வேதா மேனன் ஆகியோர் தான் திலீப், மஞ்சு பிரிய காரணமாக இருந்ததாக முன்பு குற்றம் சாட்டப்பட்டது.

மஞ்சு
தானும், திலீப் ஏட்டனும் பிரிய நடிகைகள் பாவனா, சம்யுக்தா வர்மா, பூர்ணிமா, ஸ்வேதா மேனன் ஆகியோர் காரணம் இல்லை என்றும், அவர்களை அநியாயமாக திட்ட வேண்டாம் என்றும் மஞ்சு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்மூட்டி, ஜெயராம்
திலீப், காவ்யா மாதவனின் திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட ஒரு சிலரே கலந்து கொண்டனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் திருமணத்திற்கு வரவில்லை.


Click it and Unblock the Notifications











