Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மறைந்த நடிகர் ரதீஷுக்காக 'அந்த ஒரு' கொள்கையை தளர்த்திய திலீப், மஞ்சு வாரியர்
திருவனந்தபுரம்: மறைந்த நடிகர் ரதீஷுக்காக நடிகர் திலீப்பும் அவரது முன்னாள் மனைவி மஞ்சுவும் தங்களின் கொள்கையை தளர்த்தியுள்ளனர்.
மலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். 14 ஆண்டுகள் தம்பதிகளாக இருந்த அவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர்.
மீனாட்சி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த மஞ்சு தற்போது நடித்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு ஒருவரையொருவர் சந்திப்பதை மஞ்சுவும், திலீப்பும் தவிர்த்து வருகிறார்கள்.
எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டுவிடக் கூடாது என்ற கொள்கை வைத்துள்ளனர். அதாவது ஒரு நிகழ்ச்சிக்கு திலீப் வருகிறார் என்றால் மஞ்சு அந்த பக்கமே செல்ல மாட்டார். அதே போன்று திலீப்பும் மஞ்சு கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த கொள்கையை அவர்கள் மறைந்த நடிகர் ரதீஷுக்காக தளர்த்தியுள்ளனர்.
உடன் பிறவா சகோதரரான ரதீஷின் மகள் பத்மாவின் திருமண நிகழ்ச்சியில் மஞ்சுவும், திலீப்பும் கலந்து கொண்டனர். ஆனால் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்காமல் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டனர்.