Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகை கடத்தல் வழக்கு.... நான்காவது முறையாக திலீப் ஜாமின் மனு தள்ளுபடி!
கொச்சி: பிரபல நடிகை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்புக்கு நான்காவது முறையாக ஜாமின் மறுத்துள்ளது நீதிமன்றம்.
பிரபல மலையாள நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
அலுவா கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனுக்கள், கொச்சியில் உள்ள கேரள உயர் நீதிமன்றத்தில் 2 தடவையும், அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு தடவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, அங்கமாலி நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால், திலீப்பை ஜாமினில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பு கூறியதையடுத்து, திலீப் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது நீதிமன்ற காவல், 28-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.