Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தனுஷை இயக்குவதை விட அவருடன் வேலை பார்ப்பது நல்ல அனுபவம் -ஒளிபதிவாளர் வேல்ராஜ்
தனுஷை ஒரு நடிகனாக இயக்குவதை விடவும் அவரிடம் ஒளிப்பதிவாளராக வேலை பார்ப்பது நல்ல அனுபவமாக உள்ளது என ஒளிபதிவாளர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை: பவர்பாண்டி திரைப்படத்தை தனுஷ் இயக்கியுள்ள காரணத்தால், அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. அப்படத்தின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் தனுஷ் குறித்துக் கூறும்போது தனுஷை இயக்குவதை விட அவருடன் சேர்ந்து வேலை பார்ப்பதே நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார்.
ஒளிபதிவாளர் வேல்ராஜ், தனுஷை நாயகனாக வைத்து வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய இரு படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தின் ஒளிபதிவாளர் வேல்ராஜ், தனுஷ், பவர் பாண்டி படம், ராஜ்கிரண் குறித்து பேசினார்.
தனுஷை ஒரு நடிகராக வைத்து இயக்குவதை விட, அவரிடம் ஒரு சினிமாட்டோகிராபராக வேலைபார்ப்பதுதான் பிடித்திருக்கிறது. காரணம் பவர் பாண்டி படத்தில் அவர் நடிகர்களிடம் தன்மையாக நடந்துகொண்டதைக் கண்டு, அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
அதேபோல், இந்தப் படத்தில் என் விருப்பம் போல் வேலை செய்ய அனுமதித்தார். சென்னை, ராமநாதபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஷூட் செய்தோம். அதில் சாலைகளில் படம்பிடித்தது அதிகம் பேசப்படும்.
ராஜ்கிரண் ஆன்மீகத்தில் அதிக பற்றுடையவர் என்பதாலும் சீனியர் என்பதாலும் அவரை வீட்டில் ஒரு பெரியவர் போலவே மதித்தேன் என வேல்ராஜ் கூறினார்.