Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தனுஷை இயக்குவதை விட அவருடன் வேலை பார்ப்பது நல்ல அனுபவம் -ஒளிபதிவாளர் வேல்ராஜ்
தனுஷை ஒரு நடிகனாக இயக்குவதை விடவும் அவரிடம் ஒளிப்பதிவாளராக வேலை பார்ப்பது நல்ல அனுபவமாக உள்ளது என ஒளிபதிவாளர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை: பவர்பாண்டி திரைப்படத்தை தனுஷ் இயக்கியுள்ள காரணத்தால், அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. அப்படத்தின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் தனுஷ் குறித்துக் கூறும்போது தனுஷை இயக்குவதை விட அவருடன் சேர்ந்து வேலை பார்ப்பதே நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார்.
ஒளிபதிவாளர் வேல்ராஜ், தனுஷை நாயகனாக வைத்து வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய இரு படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தின் ஒளிபதிவாளர் வேல்ராஜ், தனுஷ், பவர் பாண்டி படம், ராஜ்கிரண் குறித்து பேசினார்.
தனுஷை ஒரு நடிகராக வைத்து இயக்குவதை விட, அவரிடம் ஒரு சினிமாட்டோகிராபராக வேலைபார்ப்பதுதான் பிடித்திருக்கிறது. காரணம் பவர் பாண்டி படத்தில் அவர் நடிகர்களிடம் தன்மையாக நடந்துகொண்டதைக் கண்டு, அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
அதேபோல், இந்தப் படத்தில் என் விருப்பம் போல் வேலை செய்ய அனுமதித்தார். சென்னை, ராமநாதபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஷூட் செய்தோம். அதில் சாலைகளில் படம்பிடித்தது அதிகம் பேசப்படும்.
ராஜ்கிரண் ஆன்மீகத்தில் அதிக பற்றுடையவர் என்பதாலும் சீனியர் என்பதாலும் அவரை வீட்டில் ஒரு பெரியவர் போலவே மதித்தேன் என வேல்ராஜ் கூறினார்.