Don't Miss!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
இயக்குநர் பாக்யராஜ்.. பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா.. நடிகர் சாந்தனு தகவல்!
சென்னை: இயக்குநர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!
கொரோனா தொற்று
அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு கடந்த 2 வாரங்களில் மட்டும் தமிழ் சினிமா பிரபலங்கள் 4 பேர் பலியாகியுள்ளனர்.
பாக்யராஜுக்கு கொரோனா
இயக்குநர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் உள்ளிட்ட 4 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோருக்கு கொரோனா
இதனை அவர்களின் மகனும் நடிகருமான ஷாந்தனு பாக்யராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், "என் பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரார்த்தனை செய்யுங்கள்
எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்." இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.
விரைவில் நலம்பெறுவார்கள்
சாந்தனு பாக்யராஜின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பி விடுவார்கள் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவரும் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.