Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"விஜய் சேதுபதி பீடா போட்ட மாதிரி பேசுவாரு.." - ஆடியோ வெளியீட்டில் பிரபல இயக்குநர்!
Recommended Video
சென்னை : அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கும் 'கீ' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய இயக்குநர் கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி பேசுவது பீடா போட்ட மாதிரி இருக்கும் என தனது அசிஸ்டென்ட் டைரக்டர் கூறியதாகக் கூறினார்.
'கோ' படத்துக்கு ஜீவாவை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மூன்று நான்கு பேரை முடிவு செய்ததாகக் கூறினார் கே.வி.ஆனந்த். ஜீவாவை நடிக்க வைக்கலாம் என ஒருவர் சொன்னபோது இன்னொரு அசிஸ்டென்ட் டைரக்டர் 'முதல்வரையே முடிவு பண்ற ரோல் அது.. சின்னப்பையன் மாதிரி இருக்காரு ஜீவா. சரியா வராது' எனக் கூறினாராம்.
'கவண்' படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை முடிவு செய்தபோது, ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர், 'டி.வி ஆங்கர்னா பேசுறது கணீர்னு வார்த்தைக்கு வார்த்தை தெளிவா இருக்கணும்; பீடா போட்ட மாதிரி பேசுவாரு விஜய் சேதுபதி' என விஜய் சேதுபதியைப் பற்றிச் சொன்னாராம்.
ஆனா, 'கோ' படத்தில் ஜீவாவும், 'கவண்' படத்தில் விஜய் சேதுபதியும் அந்தந்த கேரக்டருக்கு வேற யாருமே நடிக்க முடியாதுங்கிற மாதிரி சிறப்பா நடிச்சாங்க. 'கீ' படத்தில் ஜீவா நடித்திருக்கும் ஷாட்களும் அப்படிச் சிறப்பா வந்திருக்கு" எனப் பாராட்டினார்.
என்னைப் பொறுத்தவரைக்கும் பிரமாண்டம்ங்கிறது பெரிய செட் போடுறது இல்ல. நல்ல போட்டோகிராஃபி, மியூசிக், சவுண்ட் எஃபெக்ட்ஸ், எடிட்டிங், VFX எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு மேஜிக் நடக்கும். அதுதான் பிரமாண்டம். அது இந்தப் படத்தில் இருக்கு" எனப் பேசினார்.