For Daily Alerts
Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'அன்பே வா' புகழ் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மரணம்
News
oi-Manjula
By Manjula
|
சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான ஏ.சி.திருலோகச்சந்தர் (86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.
கடந்த ஜூன் 11 ம் தேதி தனது 86 வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஏ.சி.திருலோகச்சந்தர், 4 தினங்களுக்குள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
1962ம் ஆண்டு வீரத் திருமகன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், இந்தி என் 2 மொழிகளிலும் சுமார் 40க்கும் அதிகமான படங்களை இயக்கியிருக்கிறார்.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'அன்பே வா' சிவாஜி கணேசனை நடித்த 'தெய்வமகன்', 'பாரதவிலாஸ்' மற்றும் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' போன்ற படங்கள் இவரின் பெயரை என்றென்றும் தமிழ் சினிமாவில் நிலைபெறச் செய்திருக்கும்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Legendary director AC Thirulogachander(86) Today passed away.