Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காளிகாம்பாள் கோயிலில் சாமி கும்பிட்ட ஐஸ்வர்யா ரஜினி.. உருகி உருகி யாருக்காக வேண்டிக்கிறாங்க!
சென்னை : இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.
தனுஷுடனான பிரிவுக்கு பிறகு தன்னுடைய உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்டிவரும் ஐஸ்வர்யா, வொர்க் அவுட் வீடியோக்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார்.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவரை அதிகமாக கோயில் விசிட்களில் பார்க்க முடிகிறது.
காத்துவாக்குல ரெண்டாவது ஹனிமூன்.. பார்சிலோனாவில் ரொமான்டிக் மூடில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் இந்தப் படங்கள் வசூல்ரீதியாக அதிகமாக கைக்கொடுக்கவில்லை என்ற போதிலும் விமர்சனரீதியாக சிறப்பாக பேசப்பட்டது.
சிறப்பான திரைக்கதை
சிறப்பான திரைக்கதை ஐஸ்வர்யா தனது படங்களில் பயன்படுத்துவதாக பாராட்டுக்கள் எழுந்தன. ஆனாலும் இவர் தனது குடும்பத்தின் மீது அதிகமான அக்கறை காட்டிய நிலையில் தன்னுடைய இயக்கத்தை தொடரவில்லை. இதையடுத்து குடும்பம், குழந்தைகள் என தன்னை சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்டார்.
கேரியர் நோக்கிய பயணம்
இந்நிலையில் தற்போது தன்னை மீண்டும் நிரூபிக்கும் சந்தர்ப்பம் ஐஸ்வர்யாவிற்கு ஏற்பட்டுள்ளது. தனுஷுடனான பிரிவிற்கு பிறகு தன்னுடைய கேரியர், உடல்நலன் மற்றும் குழந்தைகள்மீது தன்னுடைய பார்வையை அதிகமாக திருப்பியுள்ளார் ஐஸ்வர்யா. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
பாலிவுட்டில் படம் இயக்கம்
பாலிவுட்டிலும் படம் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகமான வொர்க் அவுட் வீடியோக்களை இவர் பகிர்ந்து வருகிறார். இவரது வெறித்தனமான வொர்க் அவுட்கள் பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் உத்வேகமாக அமைந்துள்ளன.
ஆன்மிகத்தில் ஈடுபாடு
இதனிடையே ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு காட்டிவரும் ஐஸ்வர்யா ரஜினி, கடந்த வெள்ளிக்கிழமை காளிகாம்பாள் மற்றும் திருவேற்காடு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஆடிவெள்ளி தரிசனம்
ஆடிவெள்ளியையொட்டி இந்த கோயில் தரிசனங்களை மேற்கொண்ட ஐஸ்வர்யா ரஜினி, தான் இந்தக் கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு அமர்ந்து அம்மனை பார்த்ததாகவும் அவர் தன்னைப் பார்த்து பயப்படாதே என்று கூறியதை போல உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்குள்ளே அம்மன் சக்தி
மேலும் தான் எப்போதும் தனக்கு துணை இருக்குமாறு வேண்டிக் கொண்டதாகவும் தனக்குள்ளேயே அம்மனின் சக்தி இருப்பதை தான் உணர்ந்த தருணம் இது என்றும் கூறியுள்ளார். இந்த தரிசனங்களையொட்டி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!