twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காளிகாம்பாள் கோயிலில் சாமி கும்பிட்ட ஐஸ்வர்யா ரஜினி.. உருகி உருகி யாருக்காக வேண்டிக்கிறாங்க!

    |

    சென்னை : இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.

    தனுஷுடனான பிரிவுக்கு பிறகு தன்னுடைய உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்டிவரும் ஐஸ்வர்யா, வொர்க் அவுட் வீடியோக்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார்.

    ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவரை அதிகமாக கோயில் விசிட்களில் பார்க்க முடிகிறது.

    காத்துவாக்குல ரெண்டாவது ஹனிமூன்.. பார்சிலோனாவில் ரொமான்டிக் மூடில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! காத்துவாக்குல ரெண்டாவது ஹனிமூன்.. பார்சிலோனாவில் ரொமான்டிக் மூடில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

    இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

    இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

    இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரின் இந்தப் படங்கள் வசூல்ரீதியாக அதிகமாக கைக்கொடுக்கவில்லை என்ற போதிலும் விமர்சனரீதியாக சிறப்பாக பேசப்பட்டது.

    சிறப்பான திரைக்கதை

    சிறப்பான திரைக்கதை

    சிறப்பான திரைக்கதை ஐஸ்வர்யா தனது படங்களில் பயன்படுத்துவதாக பாராட்டுக்கள் எழுந்தன. ஆனாலும் இவர் தனது குடும்பத்தின் மீது அதிகமான அக்கறை காட்டிய நிலையில் தன்னுடைய இயக்கத்தை தொடரவில்லை. இதையடுத்து குடும்பம், குழந்தைகள் என தன்னை சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்டார்.

    கேரியர் நோக்கிய பயணம்

    கேரியர் நோக்கிய பயணம்

    இந்நிலையில் தற்போது தன்னை மீண்டும் நிரூபிக்கும் சந்தர்ப்பம் ஐஸ்வர்யாவிற்கு ஏற்பட்டுள்ளது. தனுஷுடனான பிரிவிற்கு பிறகு தன்னுடைய கேரியர், உடல்நலன் மற்றும் குழந்தைகள்மீது தன்னுடைய பார்வையை அதிகமாக திருப்பியுள்ளார் ஐஸ்வர்யா. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

    பாலிவுட்டில் படம் இயக்கம்

    பாலிவுட்டில் படம் இயக்கம்

    பாலிவுட்டிலும் படம் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகமான வொர்க் அவுட் வீடியோக்களை இவர் பகிர்ந்து வருகிறார். இவரது வெறித்தனமான வொர்க் அவுட்கள் பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் உத்வேகமாக அமைந்துள்ளன.

    ஆன்மிகத்தில் ஈடுபாடு

    ஆன்மிகத்தில் ஈடுபாடு

    இதனிடையே ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு காட்டிவரும் ஐஸ்வர்யா ரஜினி, கடந்த வெள்ளிக்கிழமை காளிகாம்பாள் மற்றும் திருவேற்காடு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    ஆடிவெள்ளி தரிசனம்

    ஆடிவெள்ளி தரிசனம்

    ஆடிவெள்ளியையொட்டி இந்த கோயில் தரிசனங்களை மேற்கொண்ட ஐஸ்வர்யா ரஜினி, தான் இந்தக் கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு அமர்ந்து அம்மனை பார்த்ததாகவும் அவர் தன்னைப் பார்த்து பயப்படாதே என்று கூறியதை போல உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தனக்குள்ளே அம்மன் சக்தி

    தனக்குள்ளே அம்மன் சக்தி

    மேலும் தான் எப்போதும் தனக்கு துணை இருக்குமாறு வேண்டிக் கொண்டதாகவும் தனக்குள்ளேயே அம்மனின் சக்தி இருப்பதை தான் உணர்ந்த தருணம் இது என்றும் கூறியுள்ளார். இந்த தரிசனங்களையொட்டி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Aiswarya rajini visits temple to celebrate Aadivelli
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X