Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
எஸ்பி ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. அமீர் வேண்டுகோள்!
சென்னை: இயக்குநர் எஸ்பி ஜனநாதன் உடல்நிலை குறித்து உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என இயக்குநர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயற்கை படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்பி ஜனநாதன். இந்தப் படம் தேசிய விருது பெற்றது.
சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்!
தொடர்ந்து, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
எடிட்டிங் வேலைகள்
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து லாபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது.
சுயநினைவின்றி..
இந்நிலையில் நேற்று பகல் திடீரென இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் மயங்கிய நிலையில் சுயநினைவு இன்றி கிடந்த அவரை உதவியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரவும் வதந்தி
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் காலமாகிவிட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
அமீர் அறிக்கை
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை விடுத்துள்ள இயக்குநர் அமீர், அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உதவியாளர் வேண்டுகோள்
எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் உதவியாளரான பாலாஜியும், அவரது உடல்நிலை குறித்து பரவும் தகவலை மறுத்துள்ளார்.
வருத்தமளிக்கிறது
இத்தகைய தவறான தகவல் பரப்பப்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அவர், மருத்துவர்கள் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் ஆடியோ நோட் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.