Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா தடுப்பூசி போட்ட கொண்டார் இயக்குனர் அமீர்... அனைவரும் போட வேண்டும் என அறிவுறுத்தல்!
சென்னை : தமிழ் சினிமாவில் இயக்குனராக பல படங்களை இயக்கியுள்ள இயக்குனர் அமீர் பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருதை வென்றவர்.
இப்பொழுது நாற்காலி என்ற படத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.
8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்!
நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் இயக்குனர் அமீர் குடும்பத்துடன் கொரோனா தடுப்பூசி போட்ட கொண்டதுடன் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
குழப்பம் கலந்த அச்சம்
கொரோனா இரண்டாம் அலை முதல் அலையை விட அதிதீவிரமாக பரவி பல உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் திரைப் பிரபலங்கள் உட்பட பலர் நாள்தோறும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் குழப்பம் கலந்த அச்சம் இருந்து வருகிறது.
குடும்பத்துடன் தடுப்பூசி
இந்த நிலையில் இயக்குனர் அமீர் குடும்பத்துடன் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும் அது பற்றிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது. இந்த கொரோனா நோய்த்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசின் ஏற்பாட்டின் படி ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பக்தவத்சலம் முன்னிலையில் நானும் என்னுடைய குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டோம் .
முழுமையாக விடுபடுவோம்
இந்த பெருந்தொற்றை நம்மிடம் இருந்து விரட்ட தடுப்பூசி மட்டுமே மிகச் சிறந்த வழியாக இருக்கும். எனவே நம்மிடையே நிலவக்கூடிய தடுப்பூசி பற்றிய தவறான மற்றும் எதிர்மறையான எண்ணங்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபடுவோம்.
தடுப்பூசியின் முக்கியத்துவத்தை
மிக விரைவிலேயே நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி பழையபடி வளமான ஆரோக்கியமான நோய்தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம். என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி பற்றிய முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அமீர் இப்பொழுது வி. இசட் துரை இயக்கத்தில் நாற்காலி திரைப்படத்தில் பார்க்க அரசியல்வாதியாக லீட் ரோலில் நடித்து வருகிறார்.