Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடுத்த படத்திற்கு பூஜை போட்ட ‘அருவி’ பட இயக்குநர்.. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு !
24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்த படத்திற்கு பூஜை போட்டுள்ளார் ‘அருவி’ அருண்பிரபு புருஷோத்தமன்.
சென்னை: அருவி படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது.
தனது முதல் படமான அருவி மூலமாகவே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். அருவி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அருண்பிரபு புருஷோத்தமனின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்நிலையில், அவரது இரண்டாவது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
24 ஏஎம் ஸ்டுடியோஸ்:
24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘அருவி' படத்தில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்த ரேமண்ட் படத்தொகுப்பையும், ‘மேயாத மான்' படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இசையையும் கவனித்துக் கொள்கின்றனர்.
குமுளி அருகே:
இந்தப் படத்தின் தொடக்கவிழா குமுளி அருகில் உள்ள நோஸ்ரம் மையத்தில் நேற்று நடந்துள்ளது. இதில், 24 ஏம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், படத்தொகுப்பாளர் ரேமண்ட்,பேராசிரியர் ராஜநாயகம், பாவலர் அறிவுமதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
டிவிட்டர் பதிவு:
இது தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தரமான மற்றும் அதே சமயம் பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் , இன்று அர்ப்பணிப்பு மற்றும் சின்ஸியரான அருவி பட புகழ் இயக்குனருடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம் எங்கள் மென்டர் முன்னிலையில் குமிலியில்" எனத் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திக்கேயனா?
24 AM ஸ்டுடியோஸ் இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களை மட்டுமே தயாரித்துள்ளது. எனவே, இன்னும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், இதில் சிவகார்த்திக்கேயன் நாயகனாக நடிக்கிறாரா அல்லது அருவி போன்று அனைவரும் புதுமுகங்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.