Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மனைவியை நினைத்து மீளா துயரத்தில் இயக்குநர்.. “உன்னை மிஸ் பண்றேன் பாப்பி“ உருக்கமான பதிவு !
சென்னை : இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தனது மனைவியின் மறைவை நினைத்து மீளா துயரத்தில் உருக்கமாக பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,
நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முக திறமைகள் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி மற்றும் ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார். கபாலி திரைப்படத்திற்காக இவர் எழுதிய நெருப்புடா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகனாக அறிமுகமானார். மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி உள்ளார்.இத்திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் மே 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கடந்த கொரோனா 2அலை கோர தாண்டவம் ஆடி பல உயிர்களை காவு வாங்கியது. அதில், அருண்ராஜா காமராஜின் மனைவியும் ஒருவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிந்துஜா, கடந்த ஆண்டு மே 17ந் தேதி சிகிச்சை பலளிக்காமல் உயிரிழந்தார். சிந்தியாவின் மறைவு அருண்ராஜா காமராஜை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், அருண்ராஜா காமராஜ், சோஷியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில் மறைந்த தனது மனைவி சிந்துஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார். எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பி என்று உருக்கமுடன் கேப்ஷன் கொடுத்து மனைவியின் போட்டோவை ஷேர் செய்து உள்ளார். இந்த பதிவினை பார்க்கும் போது மனம் மிகவும் கனமாகியது.
Recommended Video
நெல்சனிடம்
நான்
கற்றுக்கொண்டது..
அனுபவத்தை
பகிரும்
அருண்ராஜா
காமராஜ்!