Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மனைவியை நினைத்து மீளா துயரத்தில் இயக்குநர்.. “உன்னை மிஸ் பண்றேன் பாப்பி“ உருக்கமான பதிவு !
சென்னை : இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தனது மனைவியின் மறைவை நினைத்து மீளா துயரத்தில் உருக்கமாக பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,
நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முக திறமைகள் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி மற்றும் ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார். கபாலி திரைப்படத்திற்காக இவர் எழுதிய நெருப்புடா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகனாக அறிமுகமானார். மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி உள்ளார்.இத்திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் மே 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த கொரோனா 2அலை கோர தாண்டவம் ஆடி பல உயிர்களை காவு வாங்கியது. அதில், அருண்ராஜா காமராஜின் மனைவியும் ஒருவர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிந்துஜா, கடந்த ஆண்டு மே 17ந் தேதி சிகிச்சை பலளிக்காமல் உயிரிழந்தார். சிந்தியாவின் மறைவு அருண்ராஜா காமராஜை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், அருண்ராஜா காமராஜ், சோஷியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில் மறைந்த தனது மனைவி சிந்துஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார். எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பி என்று உருக்கமுடன் கேப்ஷன் கொடுத்து மனைவியின் போட்டோவை ஷேர் செய்து உள்ளார். இந்த பதிவினை பார்க்கும் போது மனம் மிகவும் கனமாகியது.
Recommended Video
நெல்சனிடம் நான் கற்றுக்கொண்டது.. அனுபவத்தை பகிரும் அருண்ராஜா காமராஜ்!