Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பல்வேறு கோரிக்கைகளுடன் முதல்வரைச் சந்தித்த இயக்குநர்கள்.. நடவடிக்கை எடுப்பதாக உறுதி!
Recommended Video
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகளும், திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகளும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
முதல்வரைச் சந்தித்த பின்பு பேசிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், "முதல்வரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தோம். சிறந்த படத்தைத் தேர்வு செய்யும்போது மத்திய அரசு தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ், கேடயம், பரிசுத் தொகை வழங்குவது போல தமிழக அரசும் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம்.
சென்னையில் பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஷூட்டிங் நடத்த அதிக செலவு பிடிக்கிறது. எனவே, சென்னையில் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கவேண்டும் எனும் கோரிக்கையும் வைத்தோம்." எனக் கூறினார்.
ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியபோது, "தமிழக அரசு, ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு பையனூரில் 65 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. அந்த இடத்தை ஓ.எம்.ஆர் சாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், மருத்துவமனை கட்ட நகருக்குள் இடம் வழங்க வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தொழிலாளர் சம்மேளனம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என அனைத்தையும் இணைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி கட்டுப்பாட்டில் சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்கவேண்டும்" எனும் கோரிக்கை வைத்ததாகக் கூறினார். முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாராம்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்