கட்டிபிடித்து கணவருடன் செல்ஃபி எடுத்த பிரியா அட்லி… இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம் !
சென்னை : தழிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அட்லி. முதல் படத்திலேயே பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் என பெயர் எடுத்துள்ளார்.
இதையடுத்து, தெறி , மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டுள்ளார்.
இந்நிலையில், பிரியா அட்லி தனது கணவரை கொஞ்சியபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் அந்த படம் தற்போது டிரெண்டாகி உள்ளது.

வெற்றி இயக்குனர்
சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார் அட்லி.

தெறிக்கவிட்ட தெறி
ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து திரையில் தெறிக்கவிட்டு, வசூலைவாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து, மெர்சல், பிகில் என அடுத்துத்து விஜய்யை வைத்து இயக்கி வருகிறார்.

ஷாருக்கனுடன்
அட்லீ தனது அடுத்த படத்தில் யாருடன் இணையவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வந்தன. ஆனால் கதை தேர்வு வேலைகளில் அட்லி இருப்பதால் வேறு எந்த தகவலும் இதுகுறித்து வெளியாகவில்லை.

பிரியா அட்லி
சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாக நடித்த பிரியாவை கடந்த 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை என்றாலும் அட்லி படம் தயாரிக்கும் இடங்களுக்கு எல்லாம் தனது மனைவியை தவறாமல் உடன் அழைத்துச் செல்கிறார்.

கணவருடன் செல்பி
அண்மையில் அட்லியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால் அது எதுவும் உறுதியாக வில்லை. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அட்லி, தனது கணவருடன் கொஞ்சியபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











