Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நஷ்டத்தை சரிகட்ட முடிவாம்... டிஜிட்டலில் வெளியாகிறதா, பாலாவின் வர்மா?
சென்னை: துருவ் நடிப்பில் பாலா இயக்கிய 'வர்மா' படத்தை டிஜிட்டலில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜூன் ரெட்டி' . இதை விக்ரம் மகன் துருவ் நடிப்பில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாலா இயக்கத்தில் துருவ் அறிமுகமாக, ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அவரை நடிக்க விடாதீங்க... விக்ரம் படத்தில் நடிக்க இளம் ஹீரோவுக்கு தடை!
கருத்து வேறுபாடு
ஷூட்டிங் தொடங்கி படம் ரெடியான நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்தப் படத்தை அப்படியே கைவிட்டுவிட்டு, வேறு இயக்குனரை வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டது.
ஆதித்யா வர்மா
அதன்படி கிரிசாயா இயக்கத்தில் துருவ் நடிக்க, படம் உருவானது. இந்தப் படத்துக்கு 'ஆதித்யா வர்மா' என்று டைட்டில் வைத்தனர். இதில் பனிதா சாந்து, பிரியா ஆனந்த், ராஜா உட்பட பலர் நடித்திருந்தனர்.
நஷ்டம்
கடந்த மாதம் இந்தப் படம் வெளியானது. விக்ரம் மகன் துருவ்வின் நடிப்பு பேசப்பட்டது. அதிக பட்ஜெட் காரணமாக, படம் சுமார் ரூ.7 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டிஜிட்டல்
நஷ்டத்துக்கு, இரண்டு படங்கள் எடுக்கப்பட்டதுதான் காரணம் என்பதால், பாலா இயக்கிய வர்மா படத்தை டிஜிட்டலில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது நெட்பிளிக்ஸில் படத்தை வெளியிடலாம் என்றும் அதன் மூலம் நஷ்டத்தை சரிகட்டலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.