Don't Miss!
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
பாலாஜி மோகன் சசிகாந்த் இனைந்து தயாரித்து இருக்கும் யோகிபாபுவின் ’மண்டேலா’
Recommended Video
சென்னை : தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பலமுகங்களை கொண்டு செயல் பட்டு வரும் பாலாஜி மோகன், ஆரம்பத்தில் குறும்படங்களில் இருந்து தனது சினிமா கனவை துவங்கினார். குறும்படங்கள் மூலம் இயக்குநரான பாலாஜி மோகன் 'காதலில் சொதப்புவது எப்படி' படம் மூலம் இயக்குநரானார். .இதற்கு பிறகு சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 'வாயை மூடி பேசவும்' படத்தை இயக்கினார். அதன் பின் மாரி 1 மற்றும் 2 படங்களை இதுவரையில் இயக்கி இருக்கிறார். இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான இனைய தொடரான 'ஆஸ் ஐயம் சவரிங் பிரெம் காதல்' தொடரை இயக்கி ,நடித்து தயாரித்தும் இருந்தார்.
தற்போது இவரின் வாயை மூடி பேசவும் தயாரிப்பாளரான சசிகாந்துடன் இனைந்து யோகி பாபுவின் மண்டேலா படத்தை தயாரித்து இருக்கிறார். பாலாஜி மோகனுக்கு 'மண்டேலா' படம் தான் சினிமாவில் முதல் தயாரிப்பு. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ளதாக பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . இவரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு 'ஓபன் வின்டோஸ் புரடக்ஸன்' என்று பெயரிட்டுள்ளார் .மண்டேலா படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார் .
மண்டேலா என்பவர் மிக பெரிய போராட்ட தலைவர். தென் ஆப்ரிக்காவில் பிறந்து ஆங்கிலேய காலனி ஆதிகத்துக்கு எதிராக பேராடி சுமார் 27 ஆண்டுகள் சிறைக்கு சென்றவர் மண்டேலா. சிறையில் இருந்து வந்த மண்டேலா சில வருடங்கள் தென் ஆப்ரிக்காவின் குடியரசு தலைவராக பணிபுரிந்தார். பிறகு 5 டிசம்பர் 2013ல் காலமானார். இவரின் பெயரை படத்திறக்கு தலைப்பாக வைத்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் முதல் பார்வையில் யோகிபாபுவின் தலைமுடி மற்றும் அதை வெட்டும் கத்திரி சீப்பை வைத்திருந்தனர். இதை வைத்து பார்க்கும் போது யோகி பாபு படத்தில் முடிவெட்டுபவராக நடிக்கிறார் என்பது தெரிகிறது.
ஒரு காமெடியனாக வலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைப்பது சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். இது நாகேஷ், வடிவேலு, சந்தானம் என அனைவருக்கும் நடத்திருக்கிறது.தற்போது யோகி பாபுக்கும் இது நடந்து வருகிறது. யோகி பாபு தர்மபிரபு மற்றும் கூர்கா படங்களில் இதற்கு முன்பே கதாநாயகனாக நடித்து விட்டார். மண்டேலா இவர் ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படமாகும்.