Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
பாலாஜி மோகன் சசிகாந்த் இனைந்து தயாரித்து இருக்கும் யோகிபாபுவின் ’மண்டேலா’
Recommended Video
சென்னை : தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பலமுகங்களை கொண்டு செயல் பட்டு வரும் பாலாஜி மோகன், ஆரம்பத்தில் குறும்படங்களில் இருந்து தனது சினிமா கனவை துவங்கினார். குறும்படங்கள் மூலம் இயக்குநரான பாலாஜி மோகன் 'காதலில் சொதப்புவது எப்படி' படம் மூலம் இயக்குநரானார். .இதற்கு பிறகு சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 'வாயை மூடி பேசவும்' படத்தை இயக்கினார். அதன் பின் மாரி 1 மற்றும் 2 படங்களை இதுவரையில் இயக்கி இருக்கிறார். இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான இனைய தொடரான 'ஆஸ் ஐயம் சவரிங் பிரெம் காதல்' தொடரை இயக்கி ,நடித்து தயாரித்தும் இருந்தார்.
தற்போது இவரின் வாயை மூடி பேசவும் தயாரிப்பாளரான சசிகாந்துடன் இனைந்து யோகி பாபுவின் மண்டேலா படத்தை தயாரித்து இருக்கிறார். பாலாஜி மோகனுக்கு 'மண்டேலா' படம் தான் சினிமாவில் முதல் தயாரிப்பு. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ளதாக பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . இவரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு 'ஓபன் வின்டோஸ் புரடக்ஸன்' என்று பெயரிட்டுள்ளார் .மண்டேலா படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார் .
மண்டேலா என்பவர் மிக பெரிய போராட்ட தலைவர். தென் ஆப்ரிக்காவில் பிறந்து ஆங்கிலேய காலனி ஆதிகத்துக்கு எதிராக பேராடி சுமார் 27 ஆண்டுகள் சிறைக்கு சென்றவர் மண்டேலா. சிறையில் இருந்து வந்த மண்டேலா சில வருடங்கள் தென் ஆப்ரிக்காவின் குடியரசு தலைவராக பணிபுரிந்தார். பிறகு 5 டிசம்பர் 2013ல் காலமானார். இவரின் பெயரை படத்திறக்கு தலைப்பாக வைத்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் முதல் பார்வையில் யோகிபாபுவின் தலைமுடி மற்றும் அதை வெட்டும் கத்திரி சீப்பை வைத்திருந்தனர். இதை வைத்து பார்க்கும் போது யோகி பாபு படத்தில் முடிவெட்டுபவராக நடிக்கிறார் என்பது தெரிகிறது.
ஒரு காமெடியனாக வலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைப்பது சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். இது நாகேஷ், வடிவேலு, சந்தானம் என அனைவருக்கும் நடத்திருக்கிறது.தற்போது யோகி பாபுக்கும் இது நடந்து வருகிறது. யோகி பாபு தர்மபிரபு மற்றும் கூர்கா படங்களில் இதற்கு முன்பே கதாநாயகனாக நடித்து விட்டார். மண்டேலா இவர் ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படமாகும்.