Don't Miss!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வறுமை + நோய்.. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பாக்யராஜ் சிஷ்யன்... உதவி கேட்டு உருக்கம்!
வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார் இயக்குநர் பாக்யராஜின் சிஷ்யனாக அழைக்கப்படும் நடிகர் நந்தகோபால்.
Recommended Video
சென்னை: இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யன் நடிகர் நந்தகோபால், வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் முக்கியமான படம் சுந்தரகாண்டம். அந்த படத்தில் நமசிவாயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தகோபால். சில காட்சிகளே வந்தாலும், 'டேய்... சண்முகமணி' என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர்.
அப்படம் மட்டுமின்றி ராசுக்குட்டி உள்பட பாக்யராஜின் பல படங்களில் அவர் நடித்துள்ளார். அருணாச்சலம் படத்தில் ரஜினியுடனும் சேர்ந்து நடித்துள்ளார். அப்போது ரஜினியே இவரது நடிப்பை பாராட்டியுள்ளார்.
அன்று அனைவரையும் சிரிக்க வைத்த நந்தகோபால், இன்று ஒரு வேளை சாப்பாட்டிற்காக தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறார். சினிமாவில் உள்ளவர்களின் வாழ்க்கையில் இதுபோல் பட்டினி கிடப்பது சகஜம் தான். ஆனால் நந்தகோபாலின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கு உரியது.
நீரிழிவு பாதிப்பு:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நந்தகோபால், சென்னை கோடம்பாக்கம் ராம் தியேட்டர் அருகில் உள்ள வீட்டில், கவனிக்க ஆள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். கால்கள் இரண்டும் நீர்கோர்த்து, வீங்கி இருப்பதால் அவரால் நடக்க முடியாது. எனவே தனது வேலைகளைக்கூட செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறார் நந்தகோபால்.
உதவி தேவை:
இப்போது அவருடைய ஒரே கோரிக்கை, யாராவது தனக்கு நிதியுதவி செய்து, கேர்டேக்கர் ஒருவரை நியமித்தால், தான் உயிரோடு இருக்கும் வரை உதவியாக இருக்கும் என்பதே. இப்போதும் அதே வெள்ளந்தி சிரிப்புடன் கேட்கிறார் 'நமசிவாயம்' நந்தகோபால். 47 வயதாகும் நந்தகோபால் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது அக்கா - மாமா வீட்டில் தான் தங்கியிருக்கிறார். பட வேலைகள் எதுவும் இல்லாததால், ஒருவேளை சாப்பாட்டிற்கே சிரமப்பட்டு வருகிறார்.
உதவி செய்வதாக உறுதி:
கடந்த 23ம் தேதி நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க நந்தகோபால் அழைத்துவரப்பட்டார். அப்போது தான் அவருடைய நிலைமை பலருக்கும் தெரியவந்தது. அவருடன் நடித்த பல நடிகர்கள், பரிதாபப்பட்டு தங்களால் முடிந்த உதவியை செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
குளிர் காய்ச்சல்:
எப்படி உடல்நலக்குறைவு ஏற்பட்டது என நாம் கேட்டபோது, "நானே இயக்கி நடிக்கும்படியாக ஒரு கதை தயார் செய்து வைத்திருந்தேன். தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டார். அந்த நேரத்தில் தான் குளிர்காய்ச்சல் வந்து, பிறகு நடக்கவே முடியாதபடி ஆகிவிட்டது", என்கிறார் நந்தகோபால்.
மருத்துவ உதவி தேவை:
இப்ப உங்களுடைய தேவை என்ன என கேட்டதற்கு, "இப்போது என்னுடைய தேவை மருத்துவ உதவி தான். நடிகர் சங்கமோ, அல்லது வேறு நடிகர்களோ எனக்கு மருத்துவ உதவி செய்தால் நன்றாக இருக்கும். உடல் சரியானதும், நானே எனது வேலைகளை பார்த்துக்கொள்வேன்", என பரிதாபமாக பேசுகிறார் நந்தகோபால்.
இது அழகல்ல:
உதவிகள் உரிய நேரத்தில் செய்யப்பட்டால் அதற்கு மதிப்பு. பின் காலம் கடந்து வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்மை சிரிக்க வைத்த கலைஞரை அழ விடுவது அழகல்ல. நந்தகோபாலின் இந்த கோரிக்கைகள் உரியவர்களின் காதுகளுக்கு சென்று சேர்ந்து, உடனடியாக அவருக்கு உதவிகள் கிடைத்திட வேண்டும் என்பது தான் நமது பிரார்த்தனையும்.