twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆரை போல் எஸ்பிபியை மீட்டு வர வேண்டும்.. நாளை மாலை கூட்டுப்பிரார்த்தனை.. பாரதிராஜா அழைப்பு!

    |

    சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலம் பெற வேண்டி கூட்டுப்பிரார்த்தனை செய்ய இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரைத்துறையினர் மற்றும் உலகம் எங்கும் உள்ள இசை பிரியர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

    Recommended Video

    SPB மீண்டு வர 6 மணிக்கு Pray பண்ணுங்க • Vivekh, SA. Chandrasekhar

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    அவர் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். நேற்று எஸ்பிபிக்காக வீடியோ வெளியிட்ட பாரதிராஜா, கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார்.

    இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா இன்று விடுத்துள்ள அறிக்கையில்..

    " இந்திய திரை உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்தும், மொழிகளை வளமைப்படுத்திக் கொண்டும் ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது 'பாடும் நிலா' எஸ்.பி.பி தான்.

    நாம இன்னும் பாக்காத அந்த நாலு பேரு...!! யாருன்னு பாருங்க.. தீயாய் பரவும் மீம்! நாம இன்னும் பாக்காத அந்த நாலு பேரு...!! யாருன்னு பாருங்க.. தீயாய் பரவும் மீம்!

    மீட்டு வர வேண்டும்

    மீட்டு வர வேண்டும்

    தற்போது அவன் கொரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டு முடக்கப்பட்டுள்ளான் என்று நினைக்கும்போது கண்ணீர் மல்கிறது. அவன் நிலையைக் கண்டு திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், அனைத்து துறைக் கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் வேதனை அடைவதை பார்த்து நெஞ்சம் பதறுகிறது. அன்பை மட்டுமே விதைக்கத் தெரிந்தவன், பண்பாளன், மாபெரும் கலைஞன். அந்த கலைஞன் மீண்டு வரவேண்டும். நாம் மீட்டு வரவேண்டும்.

    நாளை மாலை 6 மணிக்கு

    நாளை மாலை 6 மணிக்கு

    அதற்காக இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை 20-8-2020 (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன். பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த போது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அவர் அதிலிருந்து மீண்டு தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார்.

    மீண்டும் ஒலிக்க வேண்டும்

    மீண்டும் ஒலிக்க வேண்டும்

    அதே போல் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் குரலில் பொன்மனச் செம்மலான எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் வாருங்கள். இனம், மொழி, மதம் கடந்து ஒரு மகா கலைஞனை மீட்டெடுப்போம். அவன் குரல் காற்றில் மீண்டும் ஒலிக்க வேண்டும். ஒன்று கூடுவோம். பிரார்த்திப்போம்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Bharathiraja calls Rajini, Kamal for joint prayer to SPB recover soon. Bharathiraja says in his statement Like MGR we can Bring SPB also back to the fieled.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X