Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போன பாரதிராஜா.. வீட்டிலேயே தனிமைப்படுத்தியது சுகாதாரத்துறை!
சென்னை: சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு சென்ற இயக்குநர் பாரதிராஜாவை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா, 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் பாரதிராஜா 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.
வருமானத்தை விட உயிர்தானே முக்கியம்.. வேறு வாய்ப்பு கிடைக்காது: முதல்வருக்கு பிரபல இயக்குநர் கோரிக்கை
மீண்டும் ஒரு மரியாதை
தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு மரியாதை என்ற படம் என்ற படம் வெளியானது. தற்போது ராக்கி, மாநாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா.
மாவட்ட எல்லை
தேனி மாவட்டம் அள்ளி நகரத்தை பூர்விகமாக கொண்ட பாரதிராஜா, சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டியில் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நெகட்டிவ்
இதனை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவுக்கும் மாவட்ட எல்லையில் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து என்ஆர்டி நகரில் உள்ள அவரது வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவரில் போஸ்டர்
கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உள்ள சென்னையில் இருந்து சென்றதாலும் பல மாவட்டங்களை கடந்து சென்றதாலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரதிராஜா வீட்டின் சுவற்றிலும் சுகாதாரத்துறை சார்பில் அதற்கான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?