Don't Miss!
- Automobiles உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போன பாரதிராஜா.. வீட்டிலேயே தனிமைப்படுத்தியது சுகாதாரத்துறை!
சென்னை: சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு சென்ற இயக்குநர் பாரதிராஜாவை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா, 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் பாரதிராஜா 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.
வருமானத்தை விட உயிர்தானே முக்கியம்.. வேறு வாய்ப்பு கிடைக்காது: முதல்வருக்கு பிரபல இயக்குநர் கோரிக்கை
மீண்டும் ஒரு மரியாதை
தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு மரியாதை என்ற படம் என்ற படம் வெளியானது. தற்போது ராக்கி, மாநாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா.
மாவட்ட எல்லை
தேனி மாவட்டம் அள்ளி நகரத்தை பூர்விகமாக கொண்ட பாரதிராஜா, சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டியில் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நெகட்டிவ்
இதனை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவுக்கும் மாவட்ட எல்லையில் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து என்ஆர்டி நகரில் உள்ள அவரது வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவரில் போஸ்டர்
கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உள்ள சென்னையில் இருந்து சென்றதாலும் பல மாவட்டங்களை கடந்து சென்றதாலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரதிராஜா வீட்டின் சுவற்றிலும் சுகாதாரத்துறை சார்பில் அதற்கான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!