Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விதியை மீறிய பாரதிராஜா? வெளியே சுற்றியதாக சர்ச்சை.. சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை!
சென்னை: இயக்குநர் பாரதிராஜா 14 நாட்கள் வீட்டிலேயே தனிப்படுத்தலில் உள்ள நிலையில் அவர் வெளியே சுற்றியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
Recommended Video
இயக்குநர் பாரதிராஜா கடந்த வாரம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லி நகரத்துக்கு சென்றார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரியை காண சென்றிருந்தார் பாரதிராஜா.
சென்னையில் அதிகப்படியான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சென்னையில் இருந்து சென்றதாலும், இடையில் பல மாவட்டங்களை கடந்து சென்றதாலும் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அவர் கூட நடிச்சா.. நிறைய கத்துக்கலாம்.. பிரபல ஹீரோ குறித்து மனம் திறந்த ரம்யா நம்பீசன்!
வீட்டின் முன்பு ஸ்டிக்கர்
இதில் அவருக்கும் அவருடன் சென்ற உதவியாளர்களுக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இருப்பினும் அவரை வீட்டிலேயே இருக்குமாறு தனிமைப்படுத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகள். மேலும் அவரது வீட்டின் முன்பு தனிமைப்படுத்தியதற்காக ஸ்டிக்கரை ஓட்டினர்.
பாரதிராஜா வீடியோ
அந்தபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி தலைப்புச் செய்தியானது. இதனை தொடர்ந்து தானாகவே மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாகவும், வீட்டில் தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறினார் இயக்குநர் பாரதிராஜா.
மீண்டும் சர்ச்சை
மேலும் தானும் தனது உதவியாளர்களும் ஆரோக்கியமாகவும் ஹெல்த்தியாகவும் இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டார்.இந்நிலையில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. அதாவது இயக்குநர் பாரதிராஜா வீட்டில் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
குரங்கணி சென்று திரும்பிய...
அதாவது சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் இயக்குநர் பாரதி ராஜாவுடன் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் ''கொரோனா தடுப்பு பணிகளுக்காக குரங்கணி சென்று விட்டு திரும்பிய பாரதிராஜாவுடன் எடுத்த போட்டோ'' என பதிவிட்டுள்ளார்.
எப்படி சென்றார்?
குரங்கணி இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதி. சிறந்த சுற்றுலாத்தளம், ட்ரெக்கிங் செல்ல சிறந்த இடம் என பல்வேறு விஷயங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த பாரதிராஜா எப்படி குரங்கணிக்கு சென்று திரும்பியது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.
விதியை மீறினாரா?
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பவே, பாரதி ராஜா விதியை மீறி வீட்டை விட்டு வெளியே சென்றாரா என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால் மீண்டும் தலைப்புச் செய்தியாகிவிட்டார் இயக்குநர் பாரதிராஜா.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்