Just In
- 28 min ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 37 min ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 1 hr ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
- 1 hr ago
மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு!
Don't Miss!
- Finance
ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!
- News
என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா ?
- Automobiles
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
- Sports
மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Director bharadhiraja: ஜனநாயகம் முக்கியம்.. பதவியை ராஜினாமா செய்றேன்.. சபாஷ் பாரதிராஜா!
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்குநர் உதவி இயக்குநர்களால் சங்கத்துக்கு தலைவராக வாக்கெடுப்பு இல்லாமல், ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நடந்தது கடந்த மாதம்.
ஆனால், அதற்குள் இயக்குநர் பாரதிராஜா இந்த பதிவியை ராஜினாமா செய்து உள்ளதாக இன்று கடிதம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் தான் தேர்தல் நடத்தாமல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அடைந்த மன சங்கடங்கள் குறித்து எழுதி இருக்கார். அதனால், இயக்குனர்கள் சங்கத்துக்கான தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கவும் கேட்டுள்ளார்.

தமிழ் மக்களே
பாரதிராஜாவின் படங்களில் மண்வாசனை அதிகமாக இருக்கும். அதனால்தானோ என்னவோ மன்வாசனை என்று கூட ஒரு படம் எடுத்து மக்களை அசத்தி இருப்பார். தன்னுடைய படத்துக்கு ஒரு இனிய அருமையான பாடல் கிடைத்து விட்டால் போதும். அதை படமாக்குவதில் மனிதர் அசத்தி விடுவார். இப்படி பாடல்களை படமாக்குவதற்கு எந்த நடன இயக்குநர்களையம் அவ்வளவாக நம்பியதில்லை. நடன மாஸ்டர் இல்லாமல் பல பாடல்களை இவர் படமாக்கி இருக்கார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
இசை ஞானி இளையராஜா கூடவே வேலை பார்த்துவிட்டார், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா படத்தில் எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் கூட சேர்ந்து என்ன செய்யப்போகிறாரோ என்று, ரசிகர்கள் கவலைப் பட்டுக்கொண்டு இருந்த காலத்தில் பாடல்களை மிக அருமையாக படம்பிடித்து காட்டி இருந்தார் இயக்குநர் இமயம். அதிலும் கருத்தம்மா படத்தில் வரும் தென்மேற்கு பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும் போது சாரல் இன்ப சாரல் என்று அந்த பாடலை பார்க்கையில், நம் மீதும் சாரல் அடிக்கும் உணர்வுடன் பாரதிராஜா மெனக்கெட்டு படமாக்கி இருப்பது தெரியும்.

பாரதி ராஜா
எத்தனையோ இயக்குனர்களை, நடிகர் ,நடிகைகளை பாரதிராஜா உருவாக்கி இருந்தாலும், அவரோடு சினிமாவுக்கும் அவருக்குமான பந்தம் முடிந்துவிடுமோ என்று கூட உண்மையான பாரதிராஜா நலம் விரும்பிகள் கவலைப் படுகிறார்கள். ஏனோ, மனோஜுக்கு திரையுலகில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது.

மனசாட்சிக்கு விரோதம்
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, இப்படி சங்கத்தின் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காமால், ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தலைவர் பதிவியை தான் ராஜினாமா செய்வதாகவும், தேர்தலில் போட்டியிடாமல் தலைவர் பதவியில் இருந்ததால் சங்கடங்களையும் அனுபவித்ததாக கூறி, பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அதோடு, தன்னை ஏக மனதாகத் தேர்ந்தெடுத்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கு நன்றி சொல்லி இருக்கார் இந்த அற்புத கலைஞன்.