Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை? நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்!
Recommended Video
சென்னை: நடிகர் கயல் தேவராஜ் கேட்ட கேள்விக்கு இயக்குநர் சேரன் கொடுத்த பதிலை பலரும் லைக் செய்து வருகின்றனர்.
இயக்குநர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற சேரன், தனது பாசத்தாலும், நேர்மையான குணத்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஆதரவையும் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டபோது பார்வையாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். சேரன் வெளியேற்றப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் விஜய் டிவியையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் வெளுத்து வாங்கினர்.
ரசிகர்களின் கேள்விக்கு பதில்
பலர் சேரன் வெளியேற்றத்துக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதையே விட்டுவிட்டதாக கூறினர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தது முதல் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார் சேரன்.
|
முற்றுப்புள்ளி
இந்நிலையில் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில்,
முற்றுப்புள்ளி...
சில நேரங்களில் அவசியமாகிறது முற்றுப்பெறாத முக்கிய புள்ளிகள் என நாம் நினைத்தவர்களிடமும்.
கேள்விக்குறி..
தானாய் உருவாகிறது காரணமே இல்லாமல் நம்மை வெறுப்பவர்களை பார்த்து..
ஆச்சர்யக்குறி..
பிரமிக்கவைக்கிறது
அளவுகடந்த அன்பு எந்த எதிர்பார்ப்புமின்றி கிடைக்கும்போது.. என பதிவிட்டிருந்தார்.
|
எந்த புள்ளியில் முடிகிறது?
இந்நிலையில் அழகர் சாமியின் குதிரை, முத்துக்கு முத்தாக, கயல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தேவராஜ், சேரனிடம் டிவிட்டர் வாயிலாக கேள்வி ஒன்றை கேட்டார். அதாவது எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை? என கேட்டார்.
|
வெற்றுப்புள்ளியாய்
அதற்கு சேரன் நீண்ட விளக்கத்தோடு பதிலளித்திருக்கிறார். அதாவது, திருஷ்டிப்பொட்டு, நெற்றிப்பொட்டு, மச்சம் என பிறப்பிலே கரும்புள்ளியில் தொடங்கி... அனைத்தையும் அவிழ்த்துவிட்டு நிர்வாணமாய் வெற்றுப்புள்ளியாய் புதைப்பதில் அல்லது எரிப்பதில் முடிகிறது வாழ்க்கை நண்பரே..
இதற்கிடையில் எத்தனை புள்ளி வைத்து எத்தனை கோலம் போடுகிறோம் நாம்.. என பதிலளித்திருக்கிறார்.
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?