Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தம்பி ராமையா மகனை இயக்கும் சேரன்.. ஜூலை 13ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்
சென்னை: தம்பி ராமையா மகன் உமாபதியை நாயகனாக்கி புதிய படமொன்றை இயக்க இருக்கிறார் சேரன்.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் சேரன். கடந்த 1997ம் ஆண்டு தமிழ் சினிமாவில் 'பாரதி கண்ணம்மா' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சேரன்.

அதையடுத்து இவர் இயக்கிய 'வெற்றி கொடி கட்டு', 'பாண்டவர் பூமி' போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்னர் 'சொல்ல மறந்த கதை', 'ஆட்டோகிராப்' போன்ற படங்களில் தானே ஹீரோவாக நடித்தார்.
அதன் தொடர்ச்சியாக திருட்டு விசிடிக்களை ஒழிக்கும் முயற்சியாக 'சி2எச்3 என்ற நிறுவனத்தை தொடங்கினார் சேரன். இதன் மூலம் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை எடுத்து, சி.டி.க்களாக அதை விநியோகித்தார். ஆனால், அதற்கு மக்களிடத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவர் புதுமுக இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ள நிலையில், மீண்டும் இயக்கத்திற்கு திரும்புகிறார்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதியை வைத்து புதிய படம் ஒன்றை சேரன் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலை 13ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 'மணியார் குடும்பம்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை அறிவித்தார்.
கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்தில் உமாபதி ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். தம்பி ராமையா, உமாபதி, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.