Don't Miss!
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தம்பி ராமையா மகனை இயக்கும் சேரன்.. ஜூலை 13ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்
இயக்குனர் சேரனின் புதிய படத்தில் தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக நடிக்கிறார்.
சென்னை: தம்பி ராமையா மகன் உமாபதியை நாயகனாக்கி புதிய படமொன்றை இயக்க இருக்கிறார் சேரன்.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் சேரன். கடந்த 1997ம் ஆண்டு தமிழ் சினிமாவில் 'பாரதி கண்ணம்மா' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சேரன்.
அதையடுத்து இவர் இயக்கிய 'வெற்றி கொடி கட்டு', 'பாண்டவர் பூமி' போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்னர் 'சொல்ல மறந்த கதை', 'ஆட்டோகிராப்' போன்ற படங்களில் தானே ஹீரோவாக நடித்தார்.
அதன் தொடர்ச்சியாக திருட்டு விசிடிக்களை ஒழிக்கும் முயற்சியாக 'சி2எச்3 என்ற நிறுவனத்தை தொடங்கினார் சேரன். இதன் மூலம் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை எடுத்து, சி.டி.க்களாக அதை விநியோகித்தார். ஆனால், அதற்கு மக்களிடத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவர் புதுமுக இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ள நிலையில், மீண்டும் இயக்கத்திற்கு திரும்புகிறார்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதியை வைத்து புதிய படம் ஒன்றை சேரன் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலை 13ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 'மணியார் குடும்பம்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை அறிவித்தார்.
கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்தில் உமாபதி ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். தம்பி ராமையா, உமாபதி, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
-
படுத்தி எடுத்த கொரோனா.. சாமானியர்களுக்கு கமல் செய்த உதவி இவ்வளவா?.. உண்மையில் உலக நாயகன்தான்
-
பப்லு பிருத்விராஜுடன் பிரிவு.. முதன்முறையாக மனம் திறந்த ஷீத்தல்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
-
Trisha - மேக்கப் இல்லாத திரிஷாவை பார்த்திருக்கிறீர்களா.. ட்ரெண்டாகும் வீடியோ.. ரசிகர்கள் ஆச்சரியம்