Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
கோமகன் மரணம்.. எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. சேரன் உருக்கம்!
சென்னை: ஆட்டோகிராஃப் கோமகன் மறைவு செய்தி நெஞ்சை நொறுக்குவதாக இயக்குநர் சேரன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இயக்குநர் சேரன் இயக்கி நடித்த படம் ஆட்டோகிராஃப். 2004ஆம் ஆண்டு வெளியான இந்தி படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலில் நடித்தவர் கோமகன்.
என்ன வாய் மட்டும் தான் வேலை செய்யுது.. வித்தியாசமான குரலாலே தமிழ் சினிமாவில் கலக்கிய பாண்டு!
அந்த பாடலில் உணர்வுபூர்வமான சில வரிகளை பாடி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ராகப்ரியா என்ற இசைக்குழுவை நடத்தி வந்த கோமகன் சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.
சேரன் உருக்கம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோமகன், நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் சேரன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
|
நெஞ்சை நொறுக்கியது
இதுதொடர்பான அவரது இரங்கல் பதிவில், வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. என பதிவிட்டுள்ளார்.
காதல் திருமணம்
பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்ட கோமகன் அனிதா என்பவரை பெற்றோரின் எதிர்ப்புகளையும் மீறி காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு மோவின், மோனஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
பெரும் சோகம்
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இன்று ஒரே நாளில் குணச்சித்திர நடிகர் பாண்டு மற்றும் பாடகரும் நடிகருமான கோமகன் ஆகிய இரண்டு பேர் பலியாகியிருப்பது தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!