Don't Miss!
- News அஜித்திற்கு முன்பே நான் வந்துவிட்டேன்.. ஆனால்.. வாக்குச்சாவடியில் போலீசிடம் ஆதங்கப்பட்ட முதியவர்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோமகன் மரணம்.. எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. சேரன் உருக்கம்!
சென்னை: ஆட்டோகிராஃப் கோமகன் மறைவு செய்தி நெஞ்சை நொறுக்குவதாக இயக்குநர் சேரன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இயக்குநர் சேரன் இயக்கி நடித்த படம் ஆட்டோகிராஃப். 2004ஆம் ஆண்டு வெளியான இந்தி படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலில் நடித்தவர் கோமகன்.
என்ன வாய் மட்டும் தான் வேலை செய்யுது.. வித்தியாசமான குரலாலே தமிழ் சினிமாவில் கலக்கிய பாண்டு!
அந்த பாடலில் உணர்வுபூர்வமான சில வரிகளை பாடி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ராகப்ரியா என்ற இசைக்குழுவை நடத்தி வந்த கோமகன் சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.
சேரன் உருக்கம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோமகன், நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் சேரன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
|
நெஞ்சை நொறுக்கியது
இதுதொடர்பான அவரது இரங்கல் பதிவில், வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. என பதிவிட்டுள்ளார்.
காதல் திருமணம்
பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்ட கோமகன் அனிதா என்பவரை பெற்றோரின் எதிர்ப்புகளையும் மீறி காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு மோவின், மோனஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
பெரும் சோகம்
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இன்று ஒரே நாளில் குணச்சித்திர நடிகர் பாண்டு மற்றும் பாடகரும் நடிகருமான கோமகன் ஆகிய இரண்டு பேர் பலியாகியிருப்பது தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.