Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எருமையை வச்சு இப்படியா.. அவர பார்த்தா ஒரு தடவை கட்டிப்பிடிக்கனும்.. வீடியோவால் இம்ப்ரஸ் ஆன சேரன்!
சென்னை: எருமை மாட்டின் வரையப்பட்டுள்ள ஓவியத்தை பார்த்த இயக்குநர் சேரன் அந்த ஓவியரை பாராட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் சேரன். ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்த இவர், பல தேசிய விருதுகளையும் குவித்துள்ளார்.
கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
மாதவனின் அந்த படத்தை வாங்கிய அமேசான் பிரைம்.. ஆனால் இப்படியொரு கண்டிஷன் அதுல இருக்காம்?
நல்லப் பெயர்
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் நேர்மையாக அவர் நடந்து கொண்ட விதம் மக்கள் மத்தியில் நல்லப் பெயரை பெற்றுக் கொடுத்தது. மேலும் சேரப்பா என்ற புதிய பெயரையும் வாங்கிக் கொடுத்தது.
தோளில் பூக்கள்
இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். அதில் எருமை மாடு ஒன்றின் மீது அவ்வளவு அழகாக ஓவியம் வரையப்பட்டுள்ளது. மாட்டின் கால்களை மனிதனின் கால்களாக்கி மனிதர் ஒருவர் தோளில் பூக்களை சுமந்து செல்வதாக உள்ளது அந்த ஓவியம்.
மனிதனே நடப்பது போல்
மாட்டின் முன்பக்கம் மற்றும் பின் பக்கத்தில் மஞ்சள் சிவப்பு நிற காம்பினேஷனில் அசத்தலாக உள்ளது அந்த ஓவியம். மாடு நடக்க நடக்க மனிதனே நடப்பது போன்று உள்ளது அந்த ஓவியம். இந்த ஓவியம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் வைரலாகி வந்தது.
கட்டிப்பிடிக்கனும்
இந்நிலையில் அந்த எருமையின் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இயக்குநர் சேரன், மிகவும் ரசித்த வீடியோ என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கிரியேட்டர் எங்க இருக்கார்னு கண்டுபிடிச்சு கொரோனா முடிஞ்சதும் ஒரு தடவை கட்டிப்பிடிக்கனும்... என்ன கற்பனை.. என்ன யூகம்.. அழகு.. என்றும் புகழ்ந்திருக்கிறார்.
ரசனைக்குரியதா?
அதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவரோடு சேர்ந்து பாராட்டியிருந்தாலும், பலர் மாட்டின் மீது இப்படி பெயிண்ட் அடித்து அதனை கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள் இது பாராட்ட வேண்டிய விஷயமா? ரசனைக்குரியதா? மிருக வதை என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாவம் எருமை
மற்றொரு நெட்டிசனான இவர் பாவம் அந்த எருமை மாடு. இந்த பெயிண்ட் காரணமாக தோலில் தடிப்பும் சில உடல் உபாதைகளையும் எதிர் கொள்ள வேண்டி வரும் சார்.. இதை வேறு மாதிரி பாராட்டுங்கள் ஐயா....நல்லது.. என குறிப்பிட்டார்.
அசைவை ரசித்தேன்
இதனை பார்த்த சேரன், நானும் அதை உணர்ந்தேன்.. அந்த அசைவை அந்த ஓவியத்தில் பொருத்திப்பார்த்த தன்மையை தான் ரசித்து போட்டேன் அய்யா.. என பதில் தெரிவித்திருக்கிறார்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!