Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இதற்கு அரசு என்ன செய்யும்? எத்தனை காலம் எல்லோரும் வீட்டில் முடங்குவது? பிரபல இயக்குநர் காட்டம்!
சென்னை: தற்போது அமலில் உள்ள லாக்டவுனை கிண்டல் செய்த ரசிகருக்கு பிரபல இயக்குநர் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
ரம்ஜான் ட்ரீட்.. அமேசான் பிரைமில் வெளியானது கர்ணன்.. டிரெண்டாகும் #KarnanOnPrime
ஆனால் ஊரடங்கு நேரத்திலும் மக்கள் அதன் முக்கியத்துவத்தை அறியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனால் ஊரடங்கை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பாதி கதவுக்கு பூட்டு
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தமிழகத்தில் தற்போதைய லாக்டவுன் இப்படித்தான் இருக்கிறது என பாதி கதவு உடைந்திருக்கும் நிலையில் பூட்டு போட்டிருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
கடமையான நடவடிக்கை
மேலும் இப்படியே போனால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
அரசு என்ன செய்யும்?
ரசிகரின் அந்த டிவிட்டை பார்த்த இயக்குநர் சேரன், இதற்கு அரசு என்ன செய்யும்.. அவ்வளவு தெளிவாக முதல்வர் உரையாற்றிய பின்னும் லாக்டவுனை மதிக்காமல் வெளியில் சுற்றும் மக்கள்தானே காரணம். கொரோனா பரவலை தடுப்பது மக்கள் கையில்தான் இருக்கு.. இந்த விழிப்புணர்வு இல்லாதவர்களால் எல்லோருக்கும் ஆபத்து.. என பதிலளித்துள்ளார்.
நமக்காக பணி செய்பவர்கள்
மேலும் இதுவரை காவல்துறையில் மட்டும் 11 பேர்.. இது போல் முன்களப் பணியாளர்கள் இயங்கும் ஒவ்வொரு துறையிலும் நிறைய பேரை இழந்துகொண்டே இருக்கிறோம்.. நமக்காக பணி செய்ய வந்து அவர்கள் குடும்பம் இன்று சொல்ல முடியாத சோகத்தில் மூழ்குவது சரியா.. என்றும் காட்டமாக கேட்டுள்ளார் இயக்குநர் சேரன்.
எத்தனை காலம் முடங்குவது?
மேலும் சிந்தித்து அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கொரோனா அறிகுறி தெரிந்தவுடனேயே சிகிச்சை எடுத்து உங்களையும் காப்பாற்றி உங்கள் குடும்பம் உங்களுக்காக பணிசெய்யும் அனைவரின் குடும்பங்களையும் காப்பாற்ற விழையுங்கள்.. இன்னும் எத்தனை காலம் எல்லோரும் வீட்டில் முடங்குவது.. என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் சேரன்.