Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
'ரஜினி சார் குரலுக்கு தனி மதிப்பிருக்கிறது'! - இயக்குநர் சேரன்
சென்னை: ரஜினி சார்... ஜிஎஸ்டிக்கு எதிரா நீங்க குரல் கொடுங்க என்று இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பால் 60 சதவீதம் வரியாகவே செலுத்த வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது திரையுலகம். இதுவரை இந்த இரு வரிகளையுமே கட்டாமல் இருந்த நிலையில், திடீரென இரட்டை வரி விதித்திருப்பது, திரைத் துறையை முடக்கிப் போட்டுள்ளது.
ஒரு பக்கம், தியேட்டர்கள் மூடல், இன்னொரு பக்கம் திரைப் பிரபலங்கள் எதிர்ப்புக் குரல் என போராட்டம் வலுத்துள்ளது.
இந்த சூழலில் பலரும் ஜிஎஸ்டி, கேளிக்கை வரியை நீக்க ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இயக்குநர் சேரனும் இதை வலியுறுத்தியுள்ளார். ரஜினியின் குரலுக்கு தனி மதிப்பு உள்ளது. எனவே அவர் ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். தன் ட்விட்டர் பக்கத்தில், "ரஜினி சார்... ஜிஎஸ்டி, 30 சதவீத கேளிக்கை வரியைக் குறைக்க தயவுசெய்து குரல் கொடுங்கள். நமது துறையைக் காக்க வேண்டிய நேரமிது. உங்கள் குரலுக்கென தனி மதிப்பு இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.
சேரன் இந்த வேண்டுகோளை விடுத்த சில மணி நேரங்களில்தான், கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.