மதுமிதாவை தொடர்ந்து மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலத்தை சந்தித்த சேரன்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Recommended Video
சென்னை: மதுமிதாவை தொடர்ந்து இயக்குநர் சேரன் மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலத்தை சந்தித்திருக்கிறார்.
இயக்குநர் சேரன் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற சேரன் சக போட்டியாளர்களிடம் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார்.
நேர்மையாக விளையாடிய அவர் பெண் போட்டியாளர்களை தனது சகோதரியாகவும் மகளாகவும் பார்த்தார். இதனால் மக்களின் மரியாதையை பெற்றார் சேரன்.

பிக்பாஸ் சொந்தங்கள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும், பிக்பாஸ் வீட்டில் பழகிய சொந்தங்களை சந்தித்து வருகிறார். பிக்பாஸ் போட்டியாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த சேரன், அவர்களின் வீட்டிற்கும் சென்று வருகிறார்.

தடல்புடல் விருந்து
அந்த வகையில் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய மதுமிதாவை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்தார் சேரன். அங்கு அவருக்கு தலை வாழை இலையில் தடல்புடலாக விருந்து வைக்கப்பட்டது.

சாக்ஷி குடும்பத்தினர்
இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது இளைய மகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷியின் வீட்டிற்கு சென்றுள்ளார். சாக்ஷியின் குடும்பத்தினருடன் அவர் செல்ஃபியும் எடுத்துள்ளார்.

போட்டோக்கள் வெளியிடு
சாக்ஷி அகர்வால், சேரனின் இளைய மகளுடன் தனது வீட்டு ஊஞ்சலில் அமர்ந்து போட்டோவும் எடுத்துள்ளார். இந்த போட்டோக்களை சாக்ஷி அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
மகிழ்ச்சியாக இருக்கிறது
மேலும் குடும்பத்துடன் சிறப்பான தருணம் என்று தெரிவித்துள்ள சாக்ஷி. இதுபோன்று தூய்மையானது எதுவுமில்லை. எனது அப்பா மற்றும் சேரன் அண்ணன் இடையிலான பிணைப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











