Don't Miss!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
தீயா வேலை பார்க்கும் இயக்குனர் தனுஷ்: வியப்பில் கோலிவுட்
சென்னை: தனுஷ் இயக்கி வரும் பவர் பாண்டி படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியராக இருந்த தனுஷ் ஒரு சுபயோக சுபதினத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் முதல் ஹீரோவான ராஜ்கிரணையே தனது படத்தின் ஹீரோவாக்கியுள்ளார்.
பவர் பாண்டி என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நதியா, பிரசன்னா, சாயா சிங், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். தனுஷும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறாராம்.
கடந்த மாதம் துவங்கிய படப்பிடிப்பு விறு விறு என நடந்து வருகிறது. அதற்குள் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இந்த பட வேலையை முடித்து விட்டு தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இயக்குனராக அதுவும் முதல் படத்திலேயே இவ்வளவு வேகமாக வேலை பார்ப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.