Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தனுஷ் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா? - தயாரிப்பு மாற்றம்!
Recommended Video
சென்னை : நடிகர் தனுஷ் 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.
தனுஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு 'நான் ருத்ரன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறதாம்.
இயக்குநர்
நடிகரான தனுஷ், 'பவர் பாண்டி' மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் தாண்டி இயக்குநர் எனும் இடத்தையும் பிடித்ததால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.
அடுத்த படம்
தனுஷ் அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. 'பாகுபலி' போன்ற சரித்திரக் கதையைத்தான் அவர் படமாக்கப் போவதாகக் கூறப்பட்டது. அவர் நடிக்கும் படங்களை முடித்தபிறகு டைரக்ஷன் வேலையைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தனுஷும் நடிப்பார்
பெரிய ஹீரோ ஒருவர் நடிக்க, தனுஷும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை இது. இந்தப் படத்துக்கு 'நான் ருத்ரன்' எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம்.
வுண்டர்பார் பிலிம்ஸ்
இந்நிலையில், நிறைய படங்களைத் தயாரித்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ் பணப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது எனும் தகவல் வெளியாகியுள்ளது.